ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பெஸ்ட் ரிலீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் டாக்டர் எஸ்.இ.பி. தம்பியுடன் இணைந்து எஸ்.மகேஷ் தயாரிக்கிற படம் பள்ளிக்கூடம் போகாமலே. தஜோஸ், ஐஸ்வர்யா ராஜா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். கணேஷ் வெங்கட்ராம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ராஜ்கபூர், ஏ.வெங்கடேஷ், தேவதர்ஷினி ஆகியோரும் நடிக்கிறார்கள். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சாம்சன் இசை அமைக்கிறார். கல்வியின் முக்கியத்தும் பற்றி குறிப்பாக மாணவர்களின் நலன் பற்றி உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படம் பற்றி இயக்குனர் ஜெயசீலன் இப்படிக் கூறுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள் வரும்போது பத்திரிகையில் அடிக்கடி வரும் செய்தி தேர்வில் தோல்வி அடைந்ததால், மதிப்பெண் குறைவாக எடுத்ததால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களை பற்றிய செய்திதான். இதை படிக்கும்போது மனம் பதைபதைத்துப்போகும், இது தடுக்க நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்தப் படம். கல்வி வாழ்க்கைக்கு முக்கியம்தான். ஆனால் கல்வி மட்டுமே வாழ்க்கையாகிவிட முடியாது. ஆசிரியர்கள் போடும் மதிப்பெண் கல்விக்கான அளவீடு கிடையாது. மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை என்பதை மாணவர்கள் உணர்ந்து கொள்ளும் வண்ணம். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த கதையை வடிவமைத்திருக்கிறேன்.
தற்கொலை மனநிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுவது ஏன்? தள்ளுபவர்கள் யார் என்பதையும் வெளிப்படையாக படம் பேசும். இதில் ஹீரோயினாக நடித்திருக்கும் ஐஸ்வர்யாராஜா கேரள மாநில அரசின் பிளஸ்-2 தேர்வில் கடந்த ஆண்டு 4 சப்ஜெக்ட்டுகளில் 100 சதவிகித மதிப்பெண் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி விடுமுறை நாளில், குறிப்பாக தேர்வு முடிவுகளுக்கு முன்னதாக படத்தை வெளியிட தீர்மானித்திருக்கிறோம் என்றார் இயக்குனர் ஜெயசீலன்.