தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டைரக்டர் அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி புதிய படமொன்றில் நடிக்கிறார். இதில் அமீருக்கு ரூ.4 கோடியும், ஜெயம் ரவிக்கு ரூ.2 கோடியும் சம்பளம் என ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தற்போது ரேணிகுண்டா படத்தை தயாரித்து வரும் புதிய படநிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். தற்போது பேராண்மை படத்தில் நடித்து வரும் ரவி, அந்த படத்தை முடித்துக் கொண்டு புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். அதேநேரம் தற்போது யோகி படத்தில் நடித்து வரும் அமீர், அந்த படத்தை முடித்த பின்னர் இப்புதிய படத்தை இயக்கவுள்ளாராம். அமீருக்கு ரூ.4 கோடி சம்பளம் பேசியிருப்பதால், சம்பள விஷயத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் ஹீரோக்களுக்கு மட்டும்தான் கட்டுப்பாடு விதிக்குமா? இயக்குனர்களுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாதா? என சில நடிகர்கள் புலம்புகிறார்களாம்.