பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
புது வசந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரமன். தொடர்ந்து கோகுலம், பூவே உனக்காக, சூர்யவம்சம், உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன், வானத்தைபோல உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர், தற்போது தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் எட்டுதிக்கும் மதயானை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விக்ரமன் பங்கேற்றார். அவர் கூறும்போது, தமிழகத்தில் 2557 தியேட்டர்கள் இருந்தது, தற்போது இது 939-ஆக குறைந்துள்ளது. ஏகப்பட்ட தியேட்டர்கள் பெரிய பெரிய மால்களாகவும், திருமண மஹால்களாகவும் மாறி வருகிறது. இப்போது இருக்கும் தியேட்டர்களில் பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்தால், சின்ன பட்ஜெட் படங்களை வெளியிட முடியவில்லை. இதனால் பல படங்கள் முடங்கி கிடக்கிறது.
தற்போது, சென்னையில், அம்மா திரையரங்கம் திறக்க இருப்பதாக அறிவித்துள்ளார்கள். இது வரவேற்க தக்க விஷயமாகும். ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுத்து ஏழைகளின் பசியை போக்கிய அம்மா(முதல்வர் ஜெயலலிதா), இப்போது சினிமாக்காரர்களின் பசியை போக்க அம்மா திரையரங்கத்தை திறக்க உள்ளார். இதன்மூலம் சின்ன பட்ஜெட் படங்களையும் திரையிட முடியும். தற்போது சென்னையில் மட்டும் அம்மா திரையரங்கம் திறக்கப்பட உள்ளது. இதனை மற்ற ஊர்களிலும் திறக்க முதல்வர் உதவ வேண்டும். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கம் சார்பில் முதல்வருக்கு இதை வேண்டுகோளாக வைக்கிறோம் என்று கூறியுள்ளார்.