பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
யூ-டூப்பில் வெளியான 'ராசாத்தி' பாட்டு மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் சாம் ஆண்டர்சன். சமீபத்தில் வெளியான கோலி சோடா படத்தில் பவர்ஸ்டார் இடம்பெறும் பாடல்காட்சியில் நடன அசைவுகளை சொல்லி தரும் டான்ஸ் மாஸ்டர் போன்று நடித்திருந்தார். இவர் இப்போது எட்டுதிக்கும் மதயானை எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்ற சாம் ஆண்டர்சன், தினமலருக்கு அளித்த பேட்டி, ஈரோட்டில் நான் சொந்தமாக கொரியர் ஆபிஸ் வைத்துள்ளேன். சினிமா எனக்கு ரொம்ப பிடிக்கும். சின்ன வயதில் இருந்தே நிறைய சினிமா பார்ப்பேன். அதிலும் குறிப்பாக கவுண்டமணி-செந்தில் காமெடி என்றால் விடவே மாட்டேன். அவர்களை போலவே நானும் சினிமாவில் பெரிய ஆளாக வர வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக உழைத்து வருகிறேன். தற்போது 3 படங்களில் நடித்து வருகிறேன். சினமாவில் பெரிய காமெடி நடிகராக வருவதே என் லட்சியம் என்று கூறியுள்ளார்.