ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
ஒரு படத்தில் ரேவதி "என்னை மானமுள்ள பொண்ணுன்னு மதுரையில கேட்டாக, அந்த மாயவரத்துல கேட்டாக, மன்னார்குடியில கேட்டாக"ன்னு பாடுவார். அது மாதிரி மார்க்கெட்டை இழந்த நடிகை நமீதா நான் அரசியலுக்கு வரப்போறேன் என்னை அந்த கட்சியில கூப்பிட்டாக இந்த கட்சியில கூப்பிட்டாகன்னு சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இப்போது அவர் புதிதாக சொல்லிஇருப்பதாவது: "நான் அரசியலுக்கு வருவது உறுதி. மூணு கட்சியிலேருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கு. அது எந்தெந்த கட்சின்னு இப்போ சொல்லக்கூடாதுன்னு அம்மா (நமீதாவின் சொந்த அம்மா) சொல்லியிருக்காங்க. 16 வயசுல நான் குஜராத்துலேருந்து சென்னைக்கு வந்தேன். எல்லா ஹீரோக்களோடும் நடிச்சேன். அப்புறம் தமிழ் மக்கள் மறந்துடுவாங்கன்னு நினைச்சேன் 11 வருஷமாகியும் மக்கள் என்னை மறக்கல. அவர்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டாமா? அதை அரசியல் மூலமாக செய்ய ஆசைப்படுகிறேன். எனக்கு தேசிய அரசியலில் ஆர்வம் இல்லை. என் உயிர் தமிழ் நாட்டில்தான் இருக்கிறது. அது இங்குதான் போக வேண்டும். அதுவும் மக்களுக்காக போக வேண்டும்".
இப்பவே அரசியல்வாதி மாதிரிதானே பேசுகிறார்.