பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக சரண்யாவைத்தான் அம்மாவாக பார்த்து வந்தோம். அது சலிப்பு தட்டும் நேரத்தில் வந்தவர் துளசி. சகலகலாவல்லவன் படத்தில் கமலுக்கு தங்கையாகவும், நல்லவனுக்கு நல்லவன் படத்தில் ரஜினிக்கு மகளாகவும் நடித்தவர். அதன் பிறகு தமிழில் இருந்து தெலுங்கிற்கு சென்று விட்டார். அங்கு 100 படங்களுக்கு மேல் ஹீரோயினாக நடித்துவிட்டு இப்போது அம்மா நடிகையாக ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
"நான் தெலுங்குல நடிச்சிட்டிருக்குறப்போ டைரக்டர் சிவமணியை கல்யாணம் பண்ணிக்கிட்டு சினிமா விட்டு விலகிட்டேன். கணவர், குழந்தைகள்னு அழகாக குடும்ப வாழ்க்கை அமைஞ்சுது. இடையில் நிறைய வாய்ப்புகள் வந்தபோதும் குடும்பத்துக்காக நடிக்கவில்லை. இப்போது குழந்தைகள் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். என் கணவரும் பண்டரிபாய் மாதிரி புடவை கட்டுற, பெரிய பொட்டு வைக்கிற அவுங்க இடத்தை ஏன் நிரப்பக்கூடாது. அம்மாவாக நடி என்றார். அவரது ஆசைய நிறைவேற்ற நடிக்க வந்துவிட்டேன்.
தெலுங்கில் அம்மா கேரக்டரில் நடித்தாலும், தமிழில் முதல் படம் பிள்ளையார் கோவில் தெரு கடைசி வீடு. அந்தப் படம் சரியா போகாதால நான் நடிச்சதும் வெளியில தெரியாம போயிடுச்சு. அதற்கு பிறகு சசிகுமார் ஈசன் படத்திலிருந்து தொடர்ந்து நடிக்க வைத்தார். இப்போது நான் நடித்து வெளிவந்திருக்கும் பண்ணையாரும் பத்மினியும் எனக்கு நிறைய சான்ஸ் வாங்கிக் கொடுக்குது. என் கணவர் விரும்பியபடி பண்டரிபாய் இடத்தை பிடிக்கணுங்றதுதான் என்னோட ஆசை" என்கிறார் துளசி.