ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகரும், இயக்குனருமான பிரபுதேவாவின் பெயரை பச்சை குத்தியிருப்பது ஏன்? என்ற கேள்விக்கு நயன்தாரா பதில் அளித்திருக்கிறார். சிம்புவுடன் காதல் முறிந்து வம்பான பிறகு நயனுக்கு ஆறுதலாக இருப்பவர் பிரபுதேவா. மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்திருக்கும் பிரபுதேவா, சமீப காலமாக நயன்தாராவுடனேயே பெரும்பாலான நாட்களை கழிக்கிறார். இருவருக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது என்று ஒரு செய்தியும், இனிதான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று இன்னொரு செய்தியும் தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் நயன் - பிரபுதேவா ஜோடி கைகோர்த்து வந்ததை பத்திரிகையாளர்கள் பார்த்தனர். நிருபர்கள் சூழ்ந்திருப்பதையறிந்த ஜோடி அங்கிருந்து வேறு வழியாக எஸ்கேப் ஆன செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் மலையாள பத்திரிகையொன்றிற்கு நயன்தாரா அளித்திருக்கும் பேட்டி புது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் நயன்? பிரபுதேவா பெயரை நான் பச்சை குத்தியிருக்கிறேன். எதற்காக அவர் பெயரை பச்சை குத்தியிருக்கிறார் என்று பலரும் கேட்கிறார்கள். அவர்கள் எல்லாம் என்னதான் நினைக்கிறார்கள் என புரியவில்லை. நமக்காக வாழ்றவங்களுக்காக நாம வாழுறோம். இதுதான் உண்மை. இது எல்லாருக்குமே பொருந்தும். அதைத்தான் நானும் செய்கிறேன். எப்போதுமே நான் மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சு கவலைப்படுறதில்லை. இந்த விஷயத்திலும் அப்படித்தான். நான் மத்தவங்களுக்காக கவலைப்படவில்லை. திருமணம் எப்போன்னும் நிறையபேர் கேட்குறாங்க. தமிழ்ல ஆர்யா ஜோடியா பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துலயும், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடிச்சிட்டு இருக்கேன். இப்போதைக்கு கல்யாணம் பற்றி யோசிக்கவே இல்லை. அப்படி செய்யும்போது கண்டிப்பா சொல்றேன், என்று கூறியிருக்கிறார் நயன்தாரா.
பிரபுதேவா தனக்காக வாழுவதாகவும், அவருக்காக நானும் வாழ்கிறேன் என்றும் நயன்தாரா சொல்லாமல் சொல்லியிருக்கும் விவகாரம் கோலிவுட்டில் புது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.