ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் |
டாப்சி தமிழில் நடித்த முதல் படமான ஆடுகளம் மெகா ஹிட் என்றாலும், அவருக்கு தமிழில் போதுமான படங்கள் இல்லை. அதையடுத்து அவர் நடித்த வந்தான் வென்றான் படம் தோற்றதால் பின்னர் கோலிவுட் டைரக்டர்கள் அவரை ஓரங்கட்டி விட்டனர். அதனால் மறுபடியும் மும்பைக்கே சென்று டேரா போட்ட டாப்சி சில படங்களில் செகண்ட் ஹீரோயினியாகவும் நடித்தார்.
இதற்கிடையே ஆரம்பம் படத்தில் நடித்தவர் இப்போது முனி-3 கங்கா மற்றும் வை ராஜா வையில் கெஸ்ட் ரோல் என நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், ஆடுகளம் படத்தை இயக்கிய வெற்றிமாறனும், அதில் நடித்த தனுசும் மீண்டும் இணைகிறார்கள் என்ற சேதியறிந்து, அந்த ராசியான கூட்டணியுடன் தன்னையும் சேர்த்துக்கொள்ள திரைக்குப்பின்னால் தீவிர முயற்சிகள் எடுத்தார் டாப்சி.
ஆனால், வேங்கைசாமிக்கு வேறு மாதிரியான முக அமைப்பை தாங்கள் தேடிக்கொண்டிருப்பதாக சொன்னவர்கள், அதுவரை மேக்கப் டெஸ்ட் எடுத்த நடிகைகளின் போட்டோக்களை அவர் முன்பு எடுத்துப்போட்டார்களாம். அதைப்பார்த்த டாப்சி, நானும் தெலுங்கில் குண்டல்லோ கோடாரி என்றொரு படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். அதனால் எந்த மாதிரியான கதாபாத்திரத்திற்கு ஏற்பவும் என்னால் மாற முடியும் என்றாராம்.
ஆனபோதும், டாப்சியின் பேச்சை யாரும் காதுகொடுத்தே கேட்கவில்லையாம். அதன்பிறகுதான் இனி தமிழில் கங்கா படம் வெளியான பிறகுதான் புதிய படங்களுக்கான முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு முன்பு நாம் எடுக்கிற முயற்சி எலலாமே வேஸ்டுதான் என்பதை புரிந்து கொண்ட டாப்சி மும்பைக்கு பறந்து விட்டார். யாராவது கோலிவுட் டைரக்டர்கள், தன்னிடம் கதை சொல்ல வேண்டுமென்று அழைப்பு விடுத்தால், இப்போதைக்கு நான் கதை கேட்கிற மூடில் இல்லை என்று நாசுக்காக தவிர்த்து வருகிறார்.