தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகரானதில் இருந்தே ரஜினிக்கு அரசியலில் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்றுதான் ஜோதிடர்கள் கணித்து சொல்லி வந்தனர். அதனால் ரஜினியும் எதிர்காலத்தில் அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என்ற தோனியில்தான் செயல்பட்டு வந்தார். தோடு, சில கட்சிகளுக்கு தனது ஆதரவை வெளிப்படையாகவும் தெரிவித்து வந்தவர், தனக்கு பிடிக்காத அரசியல் கட்சிகளை தான் நடிக்கிற படங்களில் பஞ்ச் டயலாக் வைத்து தாக்கி பேசி வந்தார். இதனால் எதிர்காலத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசம் அதிரடியாக இருக்கும் என்றுதான் தமிழகமே கருதி வந்தது.
ஆனால், காலசூழ்நிலை ரஜினியை பின்வாங்க வைத்து விட்டது. அதனால் அரசியலே வேண்டாம் என்கிற முடிவில் தற்போது இருந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தற்போது கோச்சடையான் படத்தில் நடித்துள்ள அவர் முன்பு, வருகிற லோக்சபா தேர்தலில் உங்களின் ஆதரவு, பா.ஜ.க.,வுக்கா? காங்கிரசுக்கா? ஆம் ஆத்மிக்கா? என்று கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு ரஜினி, சற்று யோசித்து விட்டு, அரசியலே வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார். ஆக, சமீபகாலமாக அரசியல் பற்றிய தனது கருத்தை வெளிப்படையாக சொல்லகூட தயங்குகிறார் ரஜினி என்பதை அவரது இந்த பதில் உணர்த்துகிறது.