'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
காமெடியை செய்தோமா காசு பார்த்தோமா என்பதில்லாமல், அரசியல்வாதிகளுடன் மோதி ஆடடம் கண்டு போனார் வடிவேலு. அதன்காரணமாக இரண்டு ஆண்டுகள் வனவாசம் போயிருந்தவர், மறுபடியும் வந்து ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் என்ற சரித்திர காமெடி படத்தில் நடித்திருக்கிறார். படம் தொடங்கியபோது படப்பிடிப்பில் சில சலசலப்புகள் ஏற்பட்டபோதும் பின்னர், சத்தமில்லாமல் படப்பிடிப்பை நகர்த்தினர்.
இந்நிலையில், தற்போது படப்பிடிப்பை முடித்து விட்டு இறுதிகட்ட பணிகளில் பிசியாகியுள்ளனர். இப்படத்தில் ஏற்கனவே தான் நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசியைப்போன்று இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் வடிவேலு. படத்தை சித்திரை மாதம் வெளியிடப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, கோடை விடுமுறையில் கோச்சடையான், விஸ்வரூபம்-2, நான் சிகப்பு மனிதன், மான்கராத்தே போன்ற மெகா படங்களும் திரைக்கு வருவதால், வடிவேலு படத்துக்காகவும் தியேட்டர்களை கைப்பற்றும் வேலைகள் நடக்கிறது. ஆனால், அவர் படத்தை திரையிடயிருந்த சில தியேட்டர்காரர்களுக்கு எச்சரிக்கைகள் சென்று கொண்டிருக்கிறதாம்.
இதனால், இது தேர்தல் நேரம். தன்னை கவனிக்க அரசியல்வாதிகளுக்கு நேரம் இருக்காது என்று நினைத்திருந்த புயல் காமெடியன், இந்த எச்சரிக்கை செய்தியை கேட்டதில் இருந்து மிரண்டு போயிருக்கிறாராம்.