ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு-த்ரிஷா நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தவர் சமந்தா. அந்த நட்பு காரணமாக அதன்பிறகு தமிழ், தெலுங்கில் தான் இயக்கிய நீ தானே என் பொன்வசந்தம் என்ற படத்தில் சமந்தாவை நாயகியாக்கினார் கெளதம்மேனன். ஆனால், அப்படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.
அதையடுத்து, தோல்விகளையும், பிரச்னைகளையும் சந்தித்துக்கொண்டிருந்த கெளதம்மேனனுக்கு அஜீத் கை கொடுத்ததால், மீண்டும் புத்துயிர் பெற்று அடுத்த பட வேலைகளில் இறங்கியிருக்கிறார். இந்த நேரத்தில், சமந்தாவை தவிர வேறு பல நடிகைகளிடம் அவர் கால்சீட் கேட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், தற்போது சமந்தா வெளியிட்டுள்ள செய்தியில், வெற்றி தோல்வி சகஜமான சினிமாவில், ஒரு படம் தோற்று விட்டது என்பதற்காக அதில் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் அதன்பிறகு இணையாமல் இருந்ததில்லை. சரியான சந்தர்ப்பங்கள் அமையும்போது மீண்டும் இணைவது சகஜமான விசயமே. அந்த வகையில, கெளதம்மேனன் இயக்கும் அஜீத் படத்தில் நடிப்பதற்கு எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், நான் தமிழ், தெலுங்கில் பல படங்களுக்கு கால்சீட் கொடுத்திருப்பதால் என்னால் கால்சீட் கொடுக்க முடியவில்லை. அதுதான் பிரச்னை என்று கூறியுள்ளார்.
சமந்தாவின் இந்த பதிலுக்குப்பிறகு நீதானே என் பொன்வசந்தம் படத்தின் தோல்வியால் சமந்தா மீது கெளதம்மேனன் அதிருப்தியில் இருப்பதாக வெளியாகிக்கொண்டிருந்த செய்திகள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.