இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாலுமகேந்திரா இயக்கத்தில் பிரசாந்த் நடித்த படம் வண்ண வண்ணப்பூக்கள். இந்த படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக வினோதினி, மெளனிகா இருவரும் நடித்திருந்தனர். அதன்பிறகுதான் பாலுமகேந்திரா, மெளனிகாவுக்கிடையே நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இணைந்து வாழ்ந்து வந்தனர்.
ஆனால் சமீபத்தில் பாலுமகேந்திரா இறந்தபோது அவரை பார்க்க மெளனிகாவுக்கு அனுமதியளிக்கவில்லை. அப்போது டைரக்டர் பாலா அவரை ஆள் வைத்து அடிக்க முயற்சி செய்ததாக தற்போது மெளனிகா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபற்றி மெளனிகா கூறுகையில், பாலுமகேந்திரா இயக்கத்தில் நடித்தபோது நான்தான் அவரை முதலில் காதலித்தேன். அவர் மறுத்தபோதும் பின்னர் ஏற்றுக்கொண்டார். அதோடு, சிவன் கோயிலில் வைத்து எனக்கு தாலி கட்டி என்னை மனைவியாக்கிக்கொண்டார். அந்த வகையில் நாங்கள் இருவரும் 28 வருடங்களாக வாழ்ந்துள்ளோம்.
அப்படியிருக்க, பாலுமகேந்திரா இறந்தபோது அவரை பார்க்க என்னை அனுமதிக்காமல் டைரக்டர் பாலா தடுத்தார். என் கணவரை பார்க்கக்கூடாது என்று என்னை தடுப்பதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கிறது. மேலும், எனக்கும், பாலுமகேந்திராவுக்குமிடையே தவறான உறவு இருந்திருந்தால் அவர் உயிரோடு இறந்தபோதே அவரிடமிருந்து என்னை பிரிக்க முயற்சி எடுத்திருக்கலாமே. அப்போது இவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்றும் கேள்வி கேட்டுள்ளார் மெளனிகா.