ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில் வெளியான வல்லினம் படத்தில் அறிமுகமானவர் மிருதுளா. பக்கா சென்னை பொண்ணு. முதல் படம் ரிலீசான பிறகு அடுத்த படத்தில் நடிக்கலாம் என்றுதான் நினைத்திருந்தார். வல்லினம் தாமதம் ஆகவே மறுமுனை, திலகர் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இப்போது வல்லினம் ரிலீசாகி விட்டது. தெலுங்கு வாய்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கிறது. தமிழில் வெளியான குள்ளநரி கூட்டம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். சந்தா சூடு எந்தா பாகுந்தி என்பது தெலுங்கு டைட்டில்.
இதுபற்றி மிருதுளா கூறியிருப்பதாவது: வல்லினம் படத்தில் என் நடிப்பை எல்லோரும் பாராட்டுகிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது. வல்லினம் படத்தில் கிளாமராக நடிக்கவில்லை. ஆனால் கிளமாராக நடிப்பீர்களா என்று கேட்டுத்தான் வாய்ப்புகள் வருகிறது. நான் தமிழ் பொண்ணு எனக்குன்னு ஒரு லிமிட் இருக்கு அதைத் தாண்டி நடிக்க மாட்டேன்னு சொல்லிடுறேன். அதனால் சில படங்கள் கைநழுவிப்போச்சு அதைப் பற்றி கவலைப்படவில்லை. நிறைய தெலுங்கு வாய்ப்புகளும் கிளாமராக வந்தது மறுத்துவிட்டேன். குள்ளநரிகூட்டம் படம் நான் பார்த்திருந்ததால் அதன் ரீமேக்கில் நடிக்க ஒப்புக் கொண்டேன். என்கிறார் மிருதுளா.