'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சின்னத்திரையின் தெனாவெட்டான நடிகை தேவிபிரியா. பரபரப்பு செய்திகளுக்கும் பஞ்சம் இல்லாதவர். தற்போது ரோமாபுரிப் பாண்டியன் தொடரில் அரசவைப்புலவரின் மகளாகவும், தளபதியின் காதலியாகவும் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சேலை கட்டி நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வண்ண வண்ண உடைகள், உடல் முழுக்க நகைகள் அணிந்து நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. நிஜத்தில்தான் மன்னர் குடும்பத்தில் பிறக்க வில்லை அப்படி நடிக்கவாவது வாய்ப்பு கிடைக்கிறதே என்ற சந்தோஷம்தான் அது. தொடரில் எனக்கு மிக முக்கியமான கேரக்டர்.
பாண்டிய நாட்டுக்கும், சோழ நாட்டுக்கும் தொடர்ந்து பகை. இருநாட்டின் உறவுக்காக இந்திர விழா நடக்கிறது. அந்த விழாவில் பாண்டிய நாட்டு தளபதி செழியன் கடத்தப்படுகிறார். இதனால் முன்னை விட பகை அதிகமாகி விடுமோ என்கிற பதட்டம் நிலவுகிறது. சோழ நாட்டு அரசவை புலவன் காரிகண்ணனாரின் மகளான நான் ஆண் வேடமணிந்து செழியனை மீட்கச் செல்கிறேன். செழியனை மீட்டு இரு நாட்டு பகையை எப்படி போக்குகிறேன் என்பது என் பகுதி கதை. அதில் செழியனோடு காதலும் கொண்டு விடுகிறேன். நான் நடிக்கும் இந்தப் பகுதி பரபரப்பாக போகும். என்கிறார் தேவிபிரியா.