ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்கிய படம் இவன் வேற மாதிரி. விக்ரம் பிரபு நடித்திருநத இந்த படத்தை லிங்குசாமி தயாரித்திருந்தார். இப்படத்திற்கு சுமார் 400 நடிகைகளை போட்டோ செஷன் நடத்திய சரவணன், கடைசியாக டில்லி மாடல் சுரபியை ஓ.கே செய்து படப்பிடிப்பை தொடங்கினார். அந்த படத்தில் நடித்தபோது சுரபியின் ஹைட் வெயிட்டைப்பார்த்து ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று யூகித்து சில படாதிபதிகள் அவரை கொத்திச்செல்ல வட்டம் போட்டனர்.
ஆனால், இவன் வேற மாதிரி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றதும், சுரபியை ராசியில்லாத நடிகை பட்டியலில் சேர்த்து விட்டார்கள். ஆனபோதும் கோடம்பாக்கத்தை விட்டு வெளியேறவில்லை சுரபி. ஒரு மேனேஜரை வைத்துக்கொண்டு தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடிப்பதற்காக கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படமொன்றில் நடிப்பதற்குகூட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பும் கைநழுவிப்போய் விட்டதாம். அதனால் தடுமாறிப்போய் நின்ற சுரபியை, இப்போது தனுஷ் நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி படத்தில் செகண்ட் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
அமலாபால் நாயகியாக நடிக்கும் அப்படத்தில், இரண்டாவது நாயகியாக நடித்தால் அதன்பிறகு தன்னை கதாநாயகியாக நடிக்க யாருமே அழைக்க மாட்டார்களே என்று யோசித்த சுரபி, விட்டால் இந்த வாய்ப்பையும் வேறு நடிகைகள் கேட்ச் பண்ணி விடுவார்கள் என்று இப்போது அப்படத்தில் கமிட்டாகி விட்டார். அதோடு, இப்படத்தில் எனது தனித்திறமையை வெளிப்படுத்தி கோலிவுட்டில் அடுத்தடுத்து புதிய படங்களை கைப்பற்றுவேன். அதற்காக தேவைப்பட்டால் கவர்ச்சி அவதாரமும் எடுப்பேன் என்கிறார் சுரபி.