பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரஜினியின் கோச்சடையான் படத்தை இயக்கி வந்தார் அவரது மகள் செளந்தர்யா. அதிக காலதாமதம் ஆனதால், ஒருவேளை படத்தையே டிராப் பண்ணி விட்டார்களோ என்றுகூட செய்திகள் பரவின. அதன்பிறகு அனிமேஷன் பணிகள் பிரமாண்டமாக நடப்பதால்தான் இந்த தாமதம் என்று செளந்தர்யாவே செய்தி வெளியிட்டு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதையடுத்து ஒருவழியாக வேலைகள் முடிக்கப்பட்டு, பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டனர். ஆனால், அந்த நேரத்தில் விஜய்-அஜீத் படங்களும் வெளியானதால், தியேட்டர் பிரச்னை எழும் என்று ரிலீஸ் தேதியை ஏப்ரல் 11-ந்தேதிக்கு மாற்றி வைத்தனர். அதோடு வருகிற மார்ச் 9-ந்தேதி ஆடியோவை வெளியிடுவதாகவும் அறிவித்தனர். அதேசமயம் சமீபத்தில் நடந்த கார்பன் கோச்சடையான் மொபைல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற செளந்தர்யா கோச்சடையான் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை என்று கூறினார்.
இந்நிலையில், தற்போது லோக்சபா தேர்தல் ஏப்ரல் 24-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதால், தேர்தல் நேரத்தில் கோச்சடையானை வெளியிடுவது சரிவராது என்று யோசித்து வருகிறார்களாம். அதனால் மார்ச் 9-ந்தேதி நடைபெறும் கோச்சடையான் ஆடியோ விழாவில், படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிபட அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.
இதேப்போல், கோடை விடுமுறையில் வெளியாகயிருந்த விஸ்வரூபம்-2, நான் சிகப்பு மனிதன், ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் ஆகிய படங்களின் ரிலீசும் மாற்று தேதிகளுக்கு தள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது.