டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அஜீத்துடன், 'கிரீடம்', ஆர்யாவுடன், 'மதராசபட்டினம்', விக்ரமுடன், 'தெய்வதிருமகள்', 'தாண்டவம்', விஜய்யுடன், 'தலைவா' என பெரிய நடிகர்களுடன் பிரமாண்ட படங்களை இயக்கிய விஜய், இப்போது குழந்தை நட்சத்திரம் பேபி சாராவுடன் ''சைவம்'' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். காரைக்குடியில் ஒரே கட்டமாக 40 நாட்களில் ஷூட்டிங்கை முடித்து திரும்பி இருக்கிறார். படத்தின் போஸ்ட் புரொக்ஷனில் பிசியாக இருந்தவர் அளித்த சிறப்பு பேட்டி இதோ...
* பெரிய ஹீரோக்களுடன் படம் பண்ணிவிட்டு இப்போது குழந்தை நட்சத்திரத்துடன் படம் பண்றீங்களே ஏன் இந்த மாற்றம்?
இந்த படத்தை பற்றி ஒரு தவறான புரிதல் எப்படியோ ஏற்பட்டிருக்கு. முதல்ல இது குழந்தைகள் படமே அல்ல. செண்டிமெண்டான ஒரு பேமிலி சப்ஜெக்ட். அதுல பேபி சாரா முக்கியமான கேரக்டர். மற்றபடி இது எல்லா படமும் போலத்தான். பெரிய ஹீரோக்களுடன்தான் படம் பண்ணனும்னு எந்த கட்டாயமும் இல்லை. புதுமுங்களை வைச்சு ஏற்கெனவே பொய் சொல்லப் போறோம்னு படம் பண்ணியிருக்கேன்.
* சைவம் டைட்டிலின் விளக்கம் என்ன?
நான் செட்டிநாட்டுக்காரன். எங்க ஏரியாவுல அசைவம்தான் பேமஸ். ஒரு அசைவ குடும்பத்துல பிறந்த நான் எப்படி சைவம் ஆனேன்ங்றதுக்கு ஒரு முக்கிய சம்பவம் ஒண்ணு காரணமாக இருக்கு. அந்த காரணம்தான் இந்தப் படத்தோட சீக்ரட். அதான் படத்தோட டைட்டிலையும் சைவம்னு வச்சிருக்கேன்.
* படத்தோட கதை என்ன?
20 வருடங்களுக்கு முன்னாடி இருந்த நம்மோட உறவுமுறைகள் குறைஞ்சிக்கிட்டே வருது. பிழைப்புக்காக டவுனுக்கு வந்தாலும் ஏதோ தீபாவளி பொங்கலுக்குத்தான் ஊருக்கு போறோமே தவிர மற்றபடி ஊருக்கு செல்வதோ, உறவுகளை சந்திப்பதோ இல்லை. இந்த மாற்றம் நம்மோட கலாச்சாரத்தை முற்றிலுமா அழிச்சிடும்ங்றதைத்தான் படத்துல முக்கியமாக சொல்றேன். அட்வைஸ் பண்றேன்னு சொல்றதை விட காட்சியா காட்டி பார்க்குறவங்க முடிவுக்கு விட்டுவிடுகிறேன். படம் பார்த்துட்டு வெளியில வரும்போது உங்களுக்கு சொந்த ஊருக்கு போகணும்னு தோன்றினால் அதுதான் இந்த படத்தோட வெற்றி.
* இன்னும் படத்தோட கதையை சொல்லவில்லையே...?
காரைக்குடியில் வாழும் நாசர் ஒரு பெரிய குடும்பத்தோட தலைவர், மூத்தவர். அவரோட மனைவி கவுசல்யா, இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். எல்லோரும் படித்து முடித்து விட்டு திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் தனித்தனியாக வசிக்கிறார்கள். ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவுக்கு எல்லோரும் வருகிறார்கள். தாத்தா நாசருக்கும், பாட்டி கவுசல்யாவுக்கும் சந்தோஷம். அதுவும் பேத்தி பேபி சாரா அவர்களுக்கு ரொம்ப செல்லம். எல்லோரும் கூடி சந்தோஷமாக இருக்கும்போது ஒரு சின்ன பிரச்னை வெடிக்கிறது. அதுவே பூதாகரமாக மாறுகிறது. அந்த பிரச்னையை பேபி சாரா எப்படி தீர்த்து வைக்கிறாள் என்பதுதான் கதை. அந்த பிரச்னை என்ன என்று கேட்டுடாதீங்க அது சஸ்பென்ஸ். மூன்றே நாள்ல நடக்குற கதை.
* உங்களோட எல்லா படத்துலேயும் நாசர் இடம்பிடிச்சிடுறாரே?
என்னோட பேவரைட் ஆர்ட்டிஸ்னு கேட்டீங்கன்னா நாசரையும், வி.எம்.சி ஹனீபாவும்தான்னு சொல்லுவேன். இரண்டு பேரையும் எப்படி வேணாலும் மாத்திக்கலாம். மொக்க சீனா இருந்தாலும் இவுங்க பிரேமுக்குள்ள இருந்த அந்த சீனோட வேல்யூ ஏறிடும். இந்தப் படத்துக்காக நாசர் தன் தலையை மழித்து சொட்டைத் தலையராக நடித்திருக்கிறார். 40 நாளும் தினமும் காலையில் தலையை மழித்து நடித்தார். இப்படி டெடிக்கேட்டா நடிக்கிறதாலதான் அவரை பிடிக்கிறது. இந்த படத்தோட முதுகெலும்பே நாசரும், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவும், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாசும்தான்.
* சாரா... பற்றி-?
தனக்கு இப்படி ஒரு குழந்தை வேணும்னு எல்லா பேரண்ட்சையும் ஏங்க வைக்கிற பொண்ணு. தெய்வத்திருமகள் ஷூட் பண்ணினப்பவே சாராவை மனசுல வச்சித்தான் சைவம் கதையை உருவாக்கினேன். ஷூட்டிங் ஸ்பாட்டுல எப்பவும் விளையாடிக்கிட்டே இருப்பா, டேக் ரெடியாகி கேமரா முன்னாடி நின்றதும் ஆளே மாறி அந்த கேரக்டராயிடுவா. நடிக்கிறதோட மட்டுமில்ல கேமரா பற்றி, லொக்கேஷன் பற்றி கேட்டு கேட்டு தெரிஞ்சுக்குவா. எழுதி வச்சுக்குங்க பிற்காலத்துல சினிமாவுல பெரிய ஆளா வருவா.
* திடீர்னு சொந்த கம்பெனி தொடங்கிட்டீங்களே?
அப்பா (ஏ.எல்.அழகப்பன்) நிறைய சொந்த படம் தயாரிச்சவங்கதான். நான் என்னோட அசிஸ்டெண்டுகளுக்கு சான்ஸ் கொடுக்குறதுக்காக திங் பிக் ஸ்டூடியோவை ஆரம்பிச்சேன். என் அசிஸ்டெண்ட் அஜயன்பாலா என்னோட பேனர்ல படம் பண்ணப்போறார். கேமராமேன் நீரவ்ஷா படம் பண்ணப்போறார். நானும் பெரிய ஹீரோக்களை வச்சு என் பேனர்ல படம் பண்ணுவேன். சைவம் என்னோட கனவு படம். அதனால சொந்த பேனரில் முதல் படமா பண்றேன்.
* அடுத்த படம்?
அஜீத், விஜய், விக்ரம், ஆர்யா நான்கு பேருக்கும் கதைகள் ரெடியா இருக்கு, யாரோட இணைகிற வாய்ப்பு கிடைக்குதோ அந்த கதை படமாகும்.
* திருமணம் எப்போது? யாரோடு?
ரொம்ப நாளா துரத்திக்கிட்டிருக்குற கேள்வி. சைவம் ரிலீசாகட்டும் கல்யாண சாப்பாடு போட்டுடலாம். கல்யாண இன்விடேஷன் கொடுக்குறப்போ பொண்ணு யாருன்னு தெரிஞ்சுடப்போவுது.