தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதுகள், சிறந்த படங்களுக்கான தேசிய விருதுகள் அதிதி(2001), பெரு(2004), துட்டிரி (2005), விமுக்தி (2008), பெட்ட ஜீவா (2010) போன்ற தன் படங்களுக்காக பெற்றிருக்கும் புகழ்பெற்ற இயக்குநர் பி.சேஷாத்ரி இயக்கிய லேட்டஸ்ட் படம் ''பாரத் ஸ்டோர்ஸ்''. இந்த படமும், தற்போது இந்தியா முழுவதும் நிறைய விவாதிக்கப்படும் ஒரு சமூக பிரச்னையின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது நாட்டில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு பல மாநிலங்களில் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கு பலர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டால் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் எந்தளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் இந்தப்படத்தின் கதை.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண்மணி திருமதி பாரதி, தன் கணவரோடு தங்கள் சொந்த ஊரான பெங்களூருவிற்கு வருகிறார். அவரது தந்தை, பல ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்த ஷெட்டி என்பவரிடம் வாங்கிய கடனை அவருக்கு திரும்பிக் கொடுக்க வேண்டும் என்று அவர் இறக்கும்போது கேட்டுக் கொள்கிறார். நிச்சயம் செய்வதாக பாரதி, தந்தைக்கு வாக்கு அளிக்கிறார். பெங்களூருவின் மையப்பகுதியில் பாரத் ஸ்டோர்ஸ் என்ற சிறிய மளிகை கடையை ஷெட்டி நடத்தி வருகிறார் என்பது மட்டும் தான் அவளுக்கு தெரிகிறது. கஷ்டப்பட்டு பாரத் ஸ்டோர்ஸ் இருக்கும் பகுதியை கண்டுபிடித்து விடுகிறார்.
பாரத் ஸ்டோர்ஸ் பஸ்ஸ்டாப் என்பது அனைவருக்கும், பெரியவர் முதல் சிறுவர் வரை தெரிந்திருக்கிறது. ஆனால் அந்த பகுதியில் பாரத் ஸ்டோர்ஸ் என்கிற மளிகைகடை எங்கு இப்போது இருக்கிறது என்று யாருக்கும் தெரிவதில்லை. பாரதி தொடர்ந்து பலரை விசாரிக்கிறார். கோவிந்த ஷெட்டியின் உதவியாளர் ஒருவரை பாரதி, தேடி கண்டுபிடிக்கிறார். பல ஆண்டுகள் நடந்த சம்பவங்களை அவர் விவரிக்கிறார். நிரந்தரமாக இருக்கும் வாடிக்கையாளர்களின் ஆதரவோடு பாரத் ஸ்டோர்ஸ் வியாபாரம் நன்றாக போய்க் கொண்டிருந்தது. ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட, விஸ்தாரமான பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள் பெங்களூரின் பல பகுதிகளில் வரத் தொடங்குகின்றன. முக்கியமான சந்திப்பில் இருக்கும் இவர் கடையை விலைக்கு அவர்கள் கேட்கின்றனர். மறுத்து விடுகிறார் ஷெட்டி.
நிறைய சாய்ஸ் இருக்கிறது, ஷாப்பிங் செய்யவும் செளகரியமாக இருக்கிறது என்று வாடிக்கையாளர்கள் பலரும் ஷாப்பிங் மால்களில் பொருட்களை வாங்க மாறிவிட்டனர். ஷெட்டியின் நெருங்கிய குடும்பங்கள் கூட இவர் கடைக்கு வருவதை நிறுத்திவிட்டனர். மிகவும் அதிகமான பண பலம் வாய்ந்த மால்களுடனும், சூப்பர் மார்க்கெட்டுகளுடனும் ஷெட்டியால் போட்டி போட முடியவில்லை. பல வருடங்களாக அவரிடம் உண்மையாக உழைத்த உதவியாளரை கூட வேலையிலிருந்து நிறுத்த வேண்டிய கட்டாயம் ஷெட்டிக்கு ஏற்படுகிறது. தொடர்ந்து வியாபாரத்தை தொடர முடியாத நிலையில் அவருக்கு பெரிய மன அழுத்தம். திடீரென்று நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார்கள். ஆஸ்பத்திரிக்கு சென்று தான் பாரதி என்றும், தான் யார் என்றும் என்ற விவரத்தையும், எதற்காக வந்துள்ளேன் என்று ஷெட்டியிடம் கூறுகிறார். ஷெட்டியால் பேசமுடியவில்லை. மேலும் பாரதி கொடுக்கும் பணத்தையும் வாங்க மறுக்கிறார் ஷெட்டி.
சமீபகாலமாக பெங்களூரு நகரின் அசுர வளர்ச்சி, புதுமேம்பாலங்கள், வானுயுர கட்டிடங்கள், கட்டமைப்பு வளர்ச்சி எல்லாவற்றையும் காணமுடிகிறது. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டால், கோவிந்த் ஷெட்டியை போல் எத்தனை பேர்கள் தங்களது வாழ்க்கையை தொலைத்து இருக்கிறார்கள் என்று எண்ணும் போது நெஞ்சம் கணக்கிறது.
கோவிந்த ஷெட்டியாக நடித்துள்ள எச்.ஜி.தத்தாரேயா, சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார். இவரைப்போலவே தேசிய விருது பெற்ற இயக்குநர் பி.சேஷாத்ரியும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவர்கள். இந்தப்படத்தை பஸந்த் புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் தயாரித்த பஸந்த குமார் பாட்டில், பலமாநில தேசிய விருதுகள் பெற்றுள்ள பிரபல தொழிலதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- கோவாவிலிருந்து எஸ்.ரஜத் -