'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள சினிமாவில், பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் ஆண்ட்ரியா ஈடுபட்டிருந்த போதுதான், திடீரென்று, ஆண்ட்ரியாவை திருமணம் செய்து கொள்ள தயாராகயிருப்பதாக, ஒரு பேட்டியில் தெரிவித்தார் பஹத் பாசில். தன்னிடம், இதுபற்றி எதுவும் பேசாமலே, இப்படி தடாலென்று, பஹத் கூறியதை அடுத்து, உடனடியாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆண்ட்ரியா, பின், மலையாள படங்களில் நடிப்பதையும் தவிர்த்தார். இப்போது பஹத் பாசில்- நஸ்ரியா திருமணம் உறுதியாகியுள்ளதால், இனி அவரால் தன் இமேஜுக்கு, எந்தவித களங்கமும் ஏற்படாது என்ற தைரியத்தில் மீண்டும் ஒரு மலையாள படத்தில் கமிட்டாகியுள்ளார் ஆண்ட்ரியா. ஆனால், அதே படத்தில், இன்னொரு நாயகியாக ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த ஸ்ரேயா, இப்போது வெளியேறியுள்ளார். ஆண்ட்ரியா இப்படத்திற்குள் வந்த பின், அவரை மெயின் ஹீரோயினாக்கி விட்டு, என்னை டம்மியாக்கி விட்டனர். அதன் காரணமாகவே, நான், படத்திலிருந்து விலகிவிட்டேன் என, குறிப்பிட்டுள்ளார் ஸ்ரேயா.