'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பத்து ஆண்டுகளுக்கு மேலாக, கோலிவுட், டோலிவுட் சினிமாக்களில் வலம் வந்தவர் த்ரிஷா. பின், இந்தியிலும், ஒரு படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம், தோல்வியடைந்து விட்டதால், இந்தியில் நடிப்பதை த்ரிஷா விரும்பவில்லை. இதன்பின், மீண்டும் தமிழ் படங்களில் நடித்து வந்த அவருக்கு, வாய்ப்புகள் குறைந்து விட்டன. அதனால், அவர் இதுவரை திறமை காட்டாத கன்னட சினிமாவிற்குள் நுழைந்து, அடுத்தபடியாக மலையாள சினிமாவிலும், நடிக்க முயற்சி எடுத்து வருகிறார். அவர் கூறுகையில், மலையாள சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. மலையாளத்தில், மோகன்லால் தான், எனக்கு பிடித்த ஹீரோ என, பாராட்டு பத்திரம் வாசித்துள்ளார். மலையாளத்தில் நல்ல கதை கிடைத்தால், பாலக்காட்டில் குடியிருக்கும் தன் பாட்டியின் வீட்டிற்கே குடிபெயர்ந்து விடவும் திட்டமிட்டுள்ளாராம்.