தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தொலைக்காட்சி உரிமம் வாங்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் படம் எடுக்கப்பட்டு, தொலைக்காட்சிகளின் கண்டு கொள்ளாத போக்கினால் 750 படங்கள் தேங்கி கிடப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார் கூறினார். சிநேகாவின் காதலர்கள் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் ஹீரோக்களையும் ஒரு பிடிபிடித்தார். "இன்றைய ஹீரோக்களுக்கு உலக நடப்பே தெரியவில்லை. ஒரு இயக்குனர் ஒரு ஹீரோவிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். கதையை கேட்டு அந்த ஹீரோ மிரண்டு விட்டார். கதை சூப்பராக இருக்கிறது. தயாரிப்பாளரை கொண்டு வாருங்கள் நாம சேர்ந்து பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறார். அந்த இயக்குனர் என்னிடம் வந்து அந்த கதை ஏற்கெனவே வெளிவந்து அட்டர் பிளாப்பான ஒரு படத்தின் கதை என்றார்.
ஹீரோக்களுக்கு எந்த மாதிரி கதைகள் வருகிறது. எந்த மாதிரி படங்கள் வருகிறது என்பதை பற்றியெல்லாம் தெரியவில்லை. வெளி உலகமே அவர்களுக்கு தெரியவில்லை. பிளைட் டிக்கெட் எப்படி எடுக்க வேண்டும். ரெயில் டிக்கெட் எப்படி எடுக்க வேண்டும் என்பதே பலருக்கு தெரியாது. ஆனால் சம்பளத்தை எப்படி உயர்த்த வேண்டும். எப்படி வாங்க வேண்டும் என்பதை மட்டும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஒரு படம் ஃபிளாப் ஆனாலும் அந்த படத்து ஹீரோ அடுத்த படத்துக்கு சம்பளத்தை கூட்டிவிடுகிறார். ஆனால் இயக்குனருக்கு அடுத்த படம் கிடைக்காது. இதுதான் இன்றைய நிலை. சினிமா ஒரு மேஜிக் மாதிரி. வெற்றி தோல்வி வரும் போகும். சினிமாக்காரர்களுக்கு அதைவிட்டால் வேறு வேலை தெரியாது. சினிமா மட்டும் ரிட்டையர்மெண்ட் இல்லாத தொழில்" இவ்வாறு கேயார் பேசினார்.