Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நாயுடன் நடித்த அனுபவம் பற்றி மனம் திறந்தார் சிபிராஜ்

20 பிப், 2014 - 12:40 IST
எழுத்தின் அளவு:

வாரிசு நடிகர்களில் சிபிராஜூம் ஒருவர். ஸ்டூடன்ட் நம்பர்-1, லீ, நாணயம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனாலும் சிபி ராஜால் நிலைத்து நிற்க முடியவில்லை. இப்போது சிபி, 'நாய்கள் ஜாக்கிரதை' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நாய்தான் ஹீரோ, சிபிராஜ் இரண்டாவது ஹீரோ. படப்பிடிப்பு முடியும் நிலையில் இருக்கிறது. நாயுடன் நடித்த அனுபவம் பற்றி சிபிராஜ் கூறியிருப்பதாவது:

நாயை வைத்து எனக்கு ஒரு காரியம் ஆகணும். அதனால அந்த நாய் எனக்கு முக்கியம். இதுதான் படத்தோட ஒண்லைன் ஸ்டோரி. முதல்ல நான்தான் ஹீரோவா நடிக்கிறதா இருந்தது. திரைக்கதையை எழுதி முடித்த பிறகு காட்சிகளை எண்ணிப் பார்த்தால் என்னை விட நாய்க்குதான் அதிக சீன் இருந்தது. அப்போ அதுதானே ஹீரோ. நான் செகண்ட் ஹீரோ.

படத்துல நடிச்சிருக்கிறது பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஷெப்பர்ட் வகை நாய். பெயர் இடோ. ராணுவ பணிகளுக்காக பயிற்சி அளிக்கப்பட்டது. வெடிகுண்டுகளை கண்டு பிடிக்கும். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் தாக்கினால் தாக்கியவனை கடிக்கும், முன்னால் யார் ஓடினாலும் அதற்கு அவன் எதிரி. இதுதான் இந்த நாய்க்கு அளிக்கப்பட்டிருக்கும் பயிற்சி. கொஞ்சம் ஆபத்தான நாய்தான். ஆனாலும் தைரியாமா நடிச்சேன். இதுவரைக்கும் 12 முறை அது என்னை கடிச்சிருக்கு. உடனே சிகிச்சை அளிக்க டாக்டர் அருகிலேயே இருப்பார். ஆன்டி வைரஸ் ஊசி போட்டுகிட்டுதான் நடிக்கவே ஆரம்பிப்பேன்.

இடோவும் நானும் இப்போ பிரண்ட். இன்னும் கொஞ்ச நாள்ல ஷூட்டிங் முடிஞ்சிடும். இடோவ அதோட இடத்துல கொண்டுபோய் விடணும். இப்போ நினைச்சாலும் மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு. எத்தனை லட்சம்னாலும் இடோவ வாங்கிடலாமுன்னு நினைச்சேன். "சாரி இது ராணுவத்துக்கு பழக்கப்படுத்தின நாய் தனி நபருக்கு தர முடியாது"ன்னு சொல்லிடாங்க என்கிறார் சிபி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in