'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபகாலமாக எந்த படமாக இருந்தாலும் டாஸ்மாக் காட்சிகளே இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் முன்னணி ஹீரோக்களே அந்த மாதிரி காட்சிகளில் நடிப்பதால் இளைய சமுதாயம் கெட்டுப்போக வழிவகுக்கிறது என்று சென்னையில் நடைபெற்ற வீரன் முத்து ராக்கு படத்தின் ஆடியோ விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் வருத்தத்துடன் பேசினார்.
இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், சினிமாக்களில் டாஸ்மாக் காட்சி இடம்பெறுவது தப்பில்லை. ஆனால், சமீபகால படங்களில் அளவுக்கதிகமாக உள்ளது. அதிலும் விஜய், அஜீத் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில்கூட அந்த மாதிரி காட்சிகள் அதிகமாக இடம்பெறுகிறது.
சாதாரணமாக தங்களது அபிமானத்திற்குரிய ஹீரோக்கள் படங்களில் அணிந்து நடிக்கும் காஸ்டியூம்கள் மட்டுமின்றி அவர்களது ஹேர் ஸ்டைலைகூட இன்றைய இளைய சமுதாயத்தினர் அப்படியே பின்பற்றுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அந்த ஹீரோக்கள் டாஸ்மாக் காட்சிகளில் நடிப்பதைப்பார்த்து அதையும் பின்பற்றுகிறார்கள். ஆக சினிமாவில் காட்டும் கெட்ட விசயங்கள் ரசிகர்களை தவறான வழிக்கு திசை திருப்பி விடுகிறது.
இதனால் சமுதாய அக்கறை உள்ள முன்னணி ஹீரோக்கள் அந்த மாதிரி காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பேசிய கே.ராஜன், சுப்பிரமணியபுரம், வெண்ணிலா கபடிகுழு மாதிரியான நல்ல படங்களை ரசிகர்கள் வரவேற்க வேண்டும் என்றார்.