குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் |
ஒரு காலத்தில் கூத்து நிகழ்ச்சிகள் கிராமப்புறங்களில் நடைபெறும் விழாக்களில் இடம்பெற்று வந்தன. ஆனால், பின்னர் நாடகம், சினிமா என்று ஆனபிறகு கூத்து நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க ஆளில்லாமல் போய் விட்டது. ஆனபோதும், இன்றைக்கும கூத்து கலைஞர்கள் ஆங்காங்கே இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அதனால் அந்த கலையின் மகத்துவத்தை இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும், கலைஞர்களின் இன்றைய நிலையை புரிந்து கொள்ளும் வகையிலும் கள்ளப்படம் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்குகிறார் புதுமுக இயக்குனர் வடிவேலு. இவர் மிஷ்கினிடத்தில் உதவியாளராக பணியாற்றியவர். அதன்காரணமாக இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை தொடங்கி வைத்த மிஷ்கின், படத்தில் வெள்ளக்கார ராணி என்றொரு பாடலும் எழுதியிருக்கிறார்.
அதோடு விடவில்லை தனது சிஷ்யரின் அன்பு வேண்டுகோளுக்கிணங்கி, கே இசையில் அந்த பாடலை தனது சொந்தக்குரலில் பாடியும் கொடுத்துள்ளார். கூத்து சம்பந்தப்பட்ட கதை என்பதால், அதை கிராமிய மணத்துடன் கமகமக்க பாடியிருக்கும் மிஷ்கின், முன்னதாக, கூத்துக் கலைஞர்கள் பாடும் அழகை கேட்டு ரசித்தபடி அதை உள்வாங்கி பிரதிபலித்தாராம். அதனால் அந்த பாடலில் சினிமானத்தனம் என்பது இல்லாமல் கூத்துக்கலைஞன் பாடியதுபோலவே உள்ளதாக பெருமிதம் கொள்கிறார் மிஷ்கின்.