‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட்டின் கிசுகிசு நாயகி அனுஷ்கா சர்மா, ரன்பீருடன் நெருக்கமாக இருக்கிறார். அதே நேரத்தில் விராட்கோலியை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார் என்று பரபரப்பு தொற்றிக் கிடக்கிறது. இதற்கு முதன் முறையாக பதில் சொல்லியிருக்கிறார் அனுஷ்கா சர்மா. அவர் கூறியிருப்பதாவது:
ரன்பீருடன் இணைத்து யாரைத்தான் பேசவில்லை. இப்போது என்னை இணைத்து பேசுகிறார்கள். நான் யாருடன் நட்பாக இருந்தாலும். அது வெறும் நட்புதான் என்பதை நிரூபிக்க வேண்டியது இருக்கிறது. இது மிகவும் கொடுமையான விஷயம். எனக்கும் ரன்பீருக்கும் காதல் என்பது எரிச்சலூட்டும் கற்பனை. நாங்கள் வெவ்வேறான கருத்துக்களும், சுவைகளும் உடையவர்கள். இருவருக்கும் காதல் சாத்தியமே இல்லை நண்பர்களாக இருப்பதற்கு எல்லாத் தகுதியும் எங்களிடம் உள்ளது.
விராட் கோலியுடன் ஒரு விளம்பர படத்தில் நடித்தேன். அவர் மிகவும் திமிரானவர் என்றார்கள். நான் அதைவிட திமிராக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். மூன்று நாட்கள் அந்த விளம்பர படத்தில் நடித்தோம். ஆனால் நான் கேள்விப்பட்டதை விட அவர் மிகவும் எளிமையானவராக, நேர்மையாளராக இருந்தார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் நண்பராக்கிக் கொண்டேன். நான் கட்டியிருக்கும் புது வீட்டு விருந்துக்கு நண்பர்களை அழைத்திருந்தேன். அந்த அடிப்படையில் விராட்கோலியையும் அழைத்திருந்தேன். அங்கிருந்து கிளம்பிவிட்டது இந்த காதல் பூதம். இப்பவும் சொல்கிறேன். நான் யாரையும் ரகசியமாக காதலிக்க மாட்டேன். மறைக்கும் அளவுக்கு காதல் அப்படியொன்றும் அசிங்கமானதல்ல என்கிறார்.