பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தீயா வேலை செய்யனும் குமாரு படத்திற்கு பிறகு மதகஜராஜா படத்தை விஷாலை வைத்து இயக்கினார் சுந்தர்.சி ஆனால் அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அதனால் தற்போது ஹன்சிகா, விஜய், ஆண்ட்ரியா நடிப்பில் அரண்மனை என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் தானே ஹீரோவாக நடித்துள்ளார். இன்னும் அப்படம் திரைக்கு வரவில்லை.
இந்நிலையில், ஏற்கனவே விமல், சிவாவைக்கொண்டு தான் இயக்கிய கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்கயிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன. ஆனால், இப்போது அந்த முயற்சியை கிடப்பில் போட்டு விட்டார் சுந்தர்.சி., மாறாக, அடுத்து முற்றிலும் இளவட்டங்களுக்காக ஒரு யூத்புல்லான கதையை படமாக்கப்போகிறாராம். வெறும் பொழுதுபோக்கு அம்சமாக இல்லாமல் இளைஞர்களுக்கு இப்படம் மூலம் கருத்து சொல்ல வருகிறாராம் சுந்தர்.சி.,
மேலும், பிரபலமான ஹீரோக்களை வைத்து அந்த கருத்துக்களை சொன்னால் எடுபடாது என்பதால், படத்தில் நடிக்கும் மூன்று ஹீரோக்களையும் புதுமுகங்களாகவே தேடுகிறாராம். அதேபோல் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகளும் புதுமுகங்கள்தானாம். இந்த படத்தில் டைரக்டராக மட்டுமே செயல்படும் சுந்தர்.சி., காமெடியைகூட தனது முந்தைய படங்களைப் போன்றில்லாமல் இப்போதைய இளைஞர்களின் ரசனைக்கேற்ப இன்னும் வித்தியாசப்படுத்தப்போகிறாராம். ஆக, அரண்மனை திரைக்கு வரும் முன்பே, புதிய பட வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறார் சுந்தர்.சி.,