இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சினிமா பாடல்களுக்கு இசையமைக்கும் பெரும்பாலான இசையமைப்பாளர்கள் அதற்கான டியூனை உருவாக்கும்போதே சில வார்த்தைகளை டம்மியாக போட்டுத்தான் டியூன் உருவாக்குவாக்குவார்கள். அந்த டம்மி டியூன்களே சில சமயங்களில் சிறப்பாக இருக்கும். அப்போது இயக்குனர்கள் அதை அப்படியே வைத்து விடுவார்கள். ஆனபோதும், வைரமுத்து, தாமரை உள்ளிட்ட சில குறிப்பிடத்தக்க பாடலாசிரியர்கள் அதற்கு அனுமதிப்பதில்லை. பாடலின் மொத்த வரிகளும் தங்களுடையதாக இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடியவர்கள்.
இந்த நிலையில், சசிகுமார் நடித்துள்ள பிரம்மன் படத்திற்கு இசையமைத்திருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், தாமரை எழுதிய ஒரு பாடலில் பாதி பல்லவியை தானே எழுதி விட்டாராம். ஆனால், பின்னர் அந்த மொத்த டியூனுக்குரிய பாடலை அவர் எழுதிக்கொடுத்தும், தான் ஆரம்பத்தில் போட்ட வரியை அப்படியே வைத்து பதிவு செய்து விட்டாராம்.
இதை அப்படத்தின் ஆடியோ விழாவில் தேவி ஸ்ரீ பிரசாத் முன்பே குறிப்பிட்டு சொன்ன தாமரை, நான் மொத்த பாடல்களையும் எழுதுவதில்தான் ஆர்வம் காட்டுகிறேன். இந்த படத்தில் சசிகுமார் நடித்திருப்பதால் ஒரேயொரு பாடலை மட்டும் எழுத சம்மதித்தேன். அதுவும் அவரே கேட்டுக்கொண்டதால் என்று குறிப்பிட்டவர், நான் எழுதும் பாடல்களில் மொத்த வரிகளும் என்னதாக இருக்க வேண்டும் என்றுதான் நான் எப்போதுமே நினைப்பேன். மற்றவர்கள் கருத்துக்கள் அதில் திணிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிப்பதில்லை. ஆனால், இந்த படத்தில் பாதி பல்லவியை இசையமைப்பாளரே எழுதியிருக்கிறார் என்று சிரித்தபடியே தனது புகாரை பதிவு செய்தார் தாமரை.