டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பாலுமகேந்திராவின் உடல் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. பாரதிராஜா, மகேந்திரன், பாலா, அமீர், விக்ரமன், உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களுடன், பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அவரது இறுதி அஞ்சலி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இலங்கையில் பிறந்த பாலுமகேந்திரா(74), 1971ல் மலையாள படமான "நெல்லுவில் ஒளிப்பதிவளராக தனது பணியை துவக்கினார். பின்னர் 1977ல் கோகிலா என்ற கன்னட படத்தின் மூலம், இயக்குனர் அவதாரம் எடுத்தார். இப்படத்தில் கமலஹாசன், ஷோபா நடித்தனர். இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. சென்னையிலேயே 150 நாட்கள் ஓடியது. இப்படத்துக்காக, "சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை வென்றார். தமிழில் இவர் ஒளிப்பதிவு செய்த முதல் படம், முள்ளும் மலரும். 1979ல் இவர் இயக்கிய முதல் தமிழ் படம் "அழியாத கோலங்கள். பின், மூடுபனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, ரெட்டை வால் குருவி, சதிலீலாவதி, ராமன் அப்துல்லா, அது ஒரு கனா காலம், சமீபத்தில் வெளியான தலைமுறைகள் உள்ளிட்ட 15 படங்களை இயக்கியுள்ளார். இதில் மூன்றாம் பிறை திரைப்படம், படத்தில் நடித்த கமலுக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது. இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார்.
சென்னை, சாலிகிராமம், இந்திராநகரில் உள்ள தனது வீடடில் தூங்கிக் கொண்டிருந்த பாலு மகேந்திராவிற்கு நேற்று(பிப்., 13ம் தேதி) அதிகாலை 4.30 மணியளவில் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலு மகேந்திராவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாலு மகேந்திராவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மூச்சுதிணறல் ஏற்பட்டதாக கூறினர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது, இருப்பினும் சிகிச்சை பலனின்றி பாலு மகேந்திராவின் உயிர் பிரிந்தது.
திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி : பாலுமகேந்திராவின் உடலுக்கு கமல், பாரதிராஜா, இளையராஜா, பாலசந்தர், மகேந்திரன், வைரமுத்து, பாலா, ராம், சசிகுமார், சமுத்திரகனி, கேயார், எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய், சூர்யா, சிவக்குமார், ரேகா, ஸ்ரீகாந்த், பாண்டியராஜன், பாண்டிராஜ், அர்ச்சனா, பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட ஏராளமான திரைநட்சத்திரங்கள் திரண்டு தங்களது கண்ணீரை அஞ்சலியாக செலுத்தினர்.
மவுனிகா குடும்பத்தோடு அஞ்சலி
முன்னதாக நேற்று நடிகை மவுனிகாவை, பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்த விட மாட்டேன் என இயக்குநர் பாலா பிரச்னை செய்தார். தொடர்ந்து அவர் அஞ்சலி செலுத்த இன்று அதிகாலை 3.30 மணி வரை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பின்னர் ஒருவழியாக அவரை அஞ்சலி செலுத்த அனுமதி கொடுத்தார் பாலா. பின்னர் இன்று காலை தனது குடும்பத்தோடு வந்து பாலுமகேந்திராவுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவிட்டு போனார்.
அலங்கார ஊர்தியில் இறுதி ஊர்வலம்
பின்னர் அவரது உடல் இயக்குநர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்கார ஊர்தியில், வடபழனியில் இருந்து போரூர் மின்மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் பாரதிராஜா, மகேந்திரன், பாலா, அமீர், விக்ரமன் உள்ளிட்ட இயக்குநர்கள் சங்கத்தினருடன் பல்லாயிரக்கணக்கானோரும் கலந்து கொண்டனர்.
உடல் தகனம்
பின்னர் பாலுமகேந்திராவின் உடல், போரூர் மின்மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது. அவரது மகன், பேரன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் உடல் தகனம் செய்யப்பட்டது.
பிறக்கின்ற போதே இறக்கின்ற சேதி
இருக்கின்றதென்பது மெய்தானே..
பேதை மனிதனே... உடம்பு என்பது
கனவுகள் வாங்கும் பைதானே...
என்று இந்த பாடலைப் படமாக்கிய கலைஞனும் அவர் தானே...!!