பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பரதேசியைத் தொடர்ந்து கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்குகிறார் பாலா. அந்த படத்தில் நாயகனாக நடிக்க ஏற்கனவே சசிகுமார் முடிவாகி விட்ட நிலையில், இதர கலைஞர்களையும் அந்த கலையை சம்பந்தப்பட்டவர்களாக தேடிப்பிடித்துக்கொண்டிருக்கிறார் பாலா.
இந்த நிலையில், அப்படத்தின் நாயகி வேடத்துக்கு ஸ்ரேயாவை அவர் ஒப்பந்தம் செய்து விட்டதோடு, கரகாட்ட பயிற்சி கொடுத்து வருவதாகவும் சில வாரங்களாகவே செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால், இப்போது இன்னொரு செய்தியும் பரவியுள்ளது. அதாவது, ஸ்ரேயா இன்னும் முடிவாகவில்லை. பரிசீலனையில்தான் இருக்கிறார் என்கிறார்கள்.
இந்த செய்தி கோலிவுட்டில் பரவியதையடுத்து, நடனத்தில் தேர்ச்சி பெற்ற சில நடிகைகள் அந்த வாய்ப்பை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்களாம். அதில் வரலட்சுமியின் பெயரும் அடிபடுகிறது. சிம்பு நடித்த போடா போடியில் நடித்தவர் வரலட்சுமி. அதன்பிறகு விஷாலுடன் மதகஜராஜா எனற படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் இன்னமும் திரைக்கு வரவில்லை.
இதனால் சரியான படவாய்ப்பு இல்லாமல் இருக்கும் வரலட்சுமி, பாலாவின் படத்தில் நடிக்க பலத்த முயற்சி எடுத்து வருகிறாராம். கூடவே, அவருக்கு குச்சிப்புடி உள்ளிட்ட பல நடனங்கள் அத்துபடி என்பதால், தற்போது வரலட்சுமியின் பெயரும் பரிசீலனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக ஒரு புதிய தகவல் தெரிவிக்கிறது.