ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
குறுகிய காலத்தில் பெரும் புகழையும், பணத்தையும் சம்பாதித்தவர் அனிருத். அதே அளவுக்கு தனது பெயரையும் கெடுத்துக் கொண்டவர். தன்னைவிட வயதில் மூத்த நடிகை ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை நெட்டில் கசிய விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது தானே இசை அமைத்து பாடிய ஆல்பம் ஒன்றை யூடியூப்பில் வெளியிட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெபதாஸ் பாண்டியன் என்பவர் "இசை அமைப்பாளர் அனிருத் பெண்கணை இழிவாக சித்தரிக்கும் பாடல்களை யூடியூப்பில் வெளியிட்டிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் கூறினார். ஆனால் போலீசார் இந்த புகார் மனுவை கண்டுகொள்ளவில்லை.
ஜெபதாஸ் பாண்டியன் விடவில்லை. இந்த புகாரை நேரடியாக நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார். மனுவை விசாரித்த நீதிமன்றம். அனிருத் மீது வழக்கு பதிவு செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிட்டது. தற்போது சைபர் கிரைம் போலீசார் அனிருத் மீது வழக்கு பதிவு செய்து எப்.ஐ.ஆர் போட்டுள்ளனர். இதனால் அனிருத் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. இதற்கிடையில் அனிருத்தின் தந்தை தனது வழக்கறிஞர் மூலம் முன்ஜாமீன் பெற தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறார். இன்று கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படலாம். அனிருத்துக்கு முன் ஜாமீன் கிடைக்கலாம். அப்படி கிடைத்துவிட்டால் அனிருத் கைது செய்யப்பட மாட்டார். ஆனால் விசாணைக்கு வரவேண்டியது இருக்கும் என்று கூறுகிறார்கள்.