இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அழகிய தமிழ் மகன் படத்தையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு கோல்கட்டாவில் முதல்கட்டமாக நடந்து முடிந்ததையடுத்து இன்று முதல் சென்னையில் நடக்கிறது. சென்னை விமான நிலையத்தில, பெங்காளி வில்லன் தோட்டா ராய் செளத்ரியும், விஜய்யும் மோதிக்கொள்ளும் ஒரு பைட் சீன் படமாகிறது. இதையடுத்து தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார் முருகதாஸ்.
இந்த நிலையில், நேற்று திடீரெனறு இணையதளங்களில் அப்படத்தின் கதை வெளியானது. அதாவது, வெளிநாட்டு உளவாளியான வில்லன் தோட்டாராய் செளத்ரி, கோல்கட்டாவில் குண்டு வெடிப்பு நிகழ்த்தவிருக்கும் செய்தி அறிந்த கோல்கட்டா போலீஸ், விஜய்யின் உதவியை நாடுமாம். அதையடுத்து விஜய் களத்தில் இறங்கி வில்லனை பிடித்து குண்டு வெடிப்பு நிகழாத வண்ணம் காப்பாற்றுவாராம்.
ஆனால், அதன்பிறகு ஜெயிலில் இருந்து தப்பித்து வெளியே வரும் வில்லன், விஜய்யை பழிவாங்க சென்னை வருவாராம். ஆனால் அங்கே அவர் சந்திக்கும் விஜய் அவரைப்போன்ற உருவில் இருக்கும் வேறு விஜய்யாம். அதையடுத்து த்னனை போலீசில் பிடித்துக்கொடுத்த விஜய்யை அவர் எப்படி கண்டு பிடிக்கிறார். அதை விஜய் எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் மீதிக்கதையாம்.
ஆனால், இந்த கதை வெளியானதில் இருந்து மூடுஅவுட்டில் இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். அதனால் எப்படி கதை வெளியில் கசிந்தது என்பது குறித்து தனது யூனிட்டில் விசாரித்து வரும் அவர், கதையில் சில திருத்தங்களை செய்ய முடிவு செய்திருக்கிறாராம்.