ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சுப்ரமணியபுரம் படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் சசிகுமார். அதையடுத்து நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி என செலக்டீவான படங்களிலேயே நடித்திருக்கிறார். இதற்கிடையே சில படங்களையும் தனது பேனரில் தயாரித்து வருகிறார். ஆக, நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வருகிறார் சசிகுமார்.
இந்நிலையில், அவர் தற்போது நடித்துள்ள பிரம்மன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில், பட நாயகன் சசிகுமார், பட நாயகி, லாவண்யா, சூரி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், பாடலாசிரியர்கள் தாமரை, நா.முத்துக்குமார், விவேகா மற்றும் படத்தின் தயாரிப்பாளர் கே. மஞ்சு, புதுமுக இயக்குனர் சாக்ரடீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய டைரக்டர் சாக்ரடீஸ், இந்த படம் மூலம் இதுவரை கிராமத்து நாயகனாக வலம் வந்த சசிகுமாரை நகரத்து நாயகனாக மாற்றியிருக்கிறேன். அதனால் லுங்கி - பனியன் அணிந்து வந்த அவர், ஜீன்ஸ்-டீசர்ட்டுக்கு மாறியுள்ளார். இந்த படத்துக்காக உணவு கட்டுபாடு, உடற்பயிற்சி செய்து உடல் எடையையும் குறைத்து கிட்டத்தட்ட கமல் சார் மாதிரி தன்னை உருமாற்றியிருக்கிறார் சசிகுமார். அதோடு, பாடல் காட்சிகளில் வித்தியாசமான அசைவுகளை வெளிப்படுத்தி நடனமாடியிருப்பவர், முன்பே இசையமைக்கப்பட்ட ஒரு சண்டை காட்சியில் அதிரடியாக நடித்துள்ளார். அது ஒரு மாஸ் பைட்டாக இருக்கும் என்றார்.
மேலும், சுப்ரமணியபுரம் படம் என்னை அதிகமாக பாதித்ததால், இந்த பிரம்மன் கதையை தயார் செய்தபோதே சசிகுமார் என் மனதில் தோன்றி விட்டார். ஆனால், அவரிடம் இந்த கதையை சொல்வதற்குள் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். அவரை சந்திக்க முடியாமல் முட்டிமோதிக்கொண்டிருந்த நேரம்தான், எடிட்டர் ராஜா முகமது மூலம் சந்திதேன். அப்போதெல்லாம் ஒரு இயக்குனராக இருந்தும் நம்மை இப்படி அலைய விடுகிறாரே சசிகுமார் என்று மனதளவில் கோபத்தில் இருந்தேன். ஆனால், யாரை சந்திப்பதாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து படம் பண்ணுவதாக முடிவெடுத்தால்தான அவர்களை சசிகுமார் சந்திப்பார். வீணாக அவர்களை காத்திருக்க வைக்க விரும்ப மாட்டார் என்பதை பின்னர்தான் தெரிந்து கொண்டேன் என்றார்.
அதையடுத்து சசிகுமார் பேசுகையில், நானும் உதவி இயக்குனராக இருந்து இயக்குனரானவன் தான். அதனால் டைரக்டர்களின் வலி எனக்கும் தெரியும். அதனால்தான் தேடி வருகிற அத்தனை இயக்குனர்களிடமும் நான் கதை கேட்பதில்லை. காரணம், 200 பேரிடம் கதையை கேட்டுவிட்டு, ஒரு படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டால் மற்றவர்களெல்லாம் வேதனைப்படுவார்கள். அதனால், நான் படம் பண்ண வேண்டும் என்ற முடிவுக்கு வரும்போது மட்டுமே கதை கேட்பேன். அப்படி நான் கேட்கும் இயக்குனரின் கதை பிடித்து விட்டால் உடனே படப்பிடிப்புக்கு சென்று விடுவேன். மேலும், என்னைக்கேட்டால், இயக்குனர்கள்தான் படைப்பாளிகள், பிரம்மாக்கள். அதனால் அவர்கள் நடிகர்களுக்காக காத்திருக்கத் தேவையில்லை என்றார்.