இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மாதவன்-ஆர்யா நடித்த வேட்டை படத்திற்கு பிறகு லிங்குசாமி இயக்கி வரும் படம் அஞ்சான். சூர்யா நாயகனாக நடித்து வரும் இப்படத்தில சமந்தா நாயகியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.
ஆரம்பத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆக்சன் காட்சிகளை படமாக்கி வந்த லிங்குசாமி, இப்போது சூர்யா-சமந்தா இடம்பெறும் டூயட் பாடல்களை படமாக்கிக்கொண்டிருக்கிறாராம். அந்த பாடலுக்கு பிரபுதேவாவின் அண்ணனான ராஜூசுந்தரம நடனம் அமைத்து வருகிறாராம். அந்த பாடலில் 100க்கணக்கான நடன கலைஞர்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறார்களாம்.
ஆனால், வெளிமாநில படப்பிடிப்புகள் நடைபெறும்போது, அந்த மாநிலத்தில் இருந்தும் 30 சதவீதம் நடன கலைஞர்களை பயன்படுத்த வேண்டும் என்றொரு சினிமா சட்டம் இருக்கிறது. ஆனால் ராஜூசுந்தரமோ, மொத்த நடன கலைஞர்களையும் சென்னையில் இருந்தே கூட்டிச்சென்று விட்டாராம். இதனால், இந்தி சினிமா சங்கத்தைச்சேர்ந்தவர்கள், அஞ்சான் ஸ்பாட்டுக்கு சென்று 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து விட்டார்களாம். வேறு வழியில்லாமல் அந்த தொகையை படத்தின் தயாரிப்பாளரான லிங்குசாமியே என்பதால், அவரே கட்டியிருக்கிறார்.
ஆனால், அந்த பிரச்னைக்கு காரணமே ராஜூசுந்தரம்தான் என்பதால், அவரது சம்பளத்தில் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்து விட்டாராம் லிங்குசாமி. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜூசுந்தரம், தான் செய்தது தவறு என்றபோதும், லிங்குசாமி மீது சென்னை நடனக்கலைஞர்கள் சங்கத்தில் புகார் செய்துள்ளார். அதையடுத்து, பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது.