டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கவிப்பேரரசு வைரமுத்துவின் வாரிசுகளில் ஒருவரான மதன்கார்கி, தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களுக்கு பாடல்களும், சில படங்களுக்கு வசனமும் எழுதி வருகிறார். இந்நிலையில் நடிகர்கள், கவிஞர்களுக்கு பட்டம் கொடுக்கப்படுவதை போன்று இப்போது இவருக்கும் ஒரு பட்டம் கொடுத்துள்ளனர். கவிப்பேரரசுவின் வாரிசு என்பதால் இவருக்கு 'கவிஇளவரசு' என்று பட்டம் கொடுத்துள்ளனர். தற்போது வெளியாகி இருக்கும் புலிவால் படத்தில் தான் இந்த டைட்டீல் கொடுக்கப்பட்டுள்ளது.
மாரிமுத்து இயக்கத்தில், என்.ஆர்.ரகுநந்தனின் இசையில், ''நேற்று பார்ட்டி...'' என்ற ஒரு பாடலை மதன்கார்கி எழுதியுள்ளார். மதன்கார்கிக்கு இந்தபட்டத்தை கொடுத்தற்காக நாங்களும், எங்களது படக்குழுவும் பெருமை அடைகிறோம் என்று கூறியுள்ளார். தற்போது மதன்கார்கி, ஐ, பாகுபாலி உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களையும் சேர்த்து சுமார் 15 படங்களுக்கு பாடல்வரிகளும், 5 படங்களுக்கு வசனமும் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.