ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
பரதேசி படத்திற்கு பிறகு பாலா டைரக்ட் செய்யப்போகும் படம் கரகாட்டக் கலை தொடர்பானது. சினிமா வருவதற்கு முன்பு மக்களை சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்த கரகாட்டக் கலையின் இன்றைய நிலையை காட்டும் படமாக பாலா இதனை உருவாக்க இருக்கிறார். இளையராஜா இசையில் 6 பாடல்களை வாங்கி விட்டார். ஒளிப்பதிவாளர் செழியன் 5டி டிஜிட்டல் கேமராவை எடுத்துக் கொண்டு கரகாட்ட கலைஞர்கள் அதிகமாக வாழும், தஞ்சாவூர், சேலம், மதுரை, புதுக்கோட்டை பகுதிக்கு சென்று அவர்களின் நிஜ வாழ்க்கையை படம்பிடித்து வருகிறார்.
இதில் இன்னொரு சிறப்பு வரப்போகிறது. அது முதன் முதலாக சசிகுமார் தாடி இல்லாமல் மொழு மொழு முகத்துடன் நீண்ட தலைமுடியுடனும் நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ஸ்ரேயாவிற்கு கரகாட்டம் சொல்லிக் கொடுப்பதற்காக கலைமாமணி விருது பெற்ற கரகாட்ட கலைஞர் ஒருவரை ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே முறைப்படி ஸ்ரேயா நடனம் கற்றவர் என்பதால் வெகு எளிதான கரகாட்டத்தை கற்றுக் கொள்வார் என்கிறார்கள்.