ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மறைந்த பழம்பெரும் நடிகர் அக்னினேனி நாகேஷ்வராவ், அவரது மகன் நாகார்ஜுனா, பேரன் நாக சைதன்யா ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் தெலுங்கு படம் மனம். இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதுதான் நாகேஷ்வரராவ் காலமானார். அவர் இந்தப் படத்துக்கு டப்பிங் பேசுவதற்காக அவர் சிகிச்சை பெற்றுவந்த ஆஸ்பத்திரியையே டப்பிங் தியேட்டராக மாற்றிக் கொடுத்திருக்கிறார் நாகார்ஜுனா.
இதுபற்றி அவர் தனது பேஸ்புக்கில் உருக்கமாக எழுதியிருப்பதாவது: மனம் படத்தின் வசன பகுதிகளை நடித்து முடித்த நிலையில்தான் அப்பாவுக்கு உடல்நலம் மோசமானது. அவரை மருத்துவமனையில் சேர்த்தேன். ஒரு நாள் என்னை அழைத்து "நான் எத்தனை நாள் உயிரோடு இருப்பேன் என்று தெரியாது. உடலில் கொஞ்சம் வலு இருக்கும்போதே டப்பிங் பேசி விடுகிறேன். எனது இந்த படுக்கை அறையையே டப்பிங் ஸ்டூடியோவாக மாற்றிக் கொடு இல்லாவிட்டால் என்னை மாதிரி பேசும் நல்ல டப்பிங் ஆர்ட்டிஸ்டை தேடி நீ அலைய வேண்டியதிருக்கும்" என்று கூறினார். அதை கேட்டபோது நான் அவர் கையை பிடித்து கதறி அழுதேன். என் மனது வலித்தது. அவரது ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தேன்.
அவரது ஆஸ்பத்திரி அறையை டப்பிங் ஸ்டூடியோவாக மாற்றினேன். அவர் தனது டயலாக்குகளை எந்த பிசிரும் இல்லாமல் பேசிக் கொடுத்தார். மரணத்தின் தருவாயிலும் அவர் ஒரு கலைஞனாக இருந்ததை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. அவரும், நானும், என் மகனும் இணைந்து ஒரு பாடல் காட்சி எடுப்பதாக இருந்தது. அது முடியாமல் போய்விட்டது.
அப்பா, மகன், பேரன் நடித்த முதல் சினிமா இதுவாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன். அவரை கவுரவிக்கும் வகையில் இந்தப் படத்தை பிரமாண்டமான முறையில் வெளியிட இருக்கிறேன். இவ்வாறு நாகர்ஜுனா எழுதியிருக்கிறார்.