கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
கிழக்கே வரும் பாட்டு, ஒயிலாட்டம் உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் ஷர்மிளா. நீண்ட இடைவெளிக்கு பிறகு நான், இவன் வேற மாதிரி படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஷர்மிளாவுக்கும், கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் என்பருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் காதலித்துதான் திருமணம் செய்து கொண்டார்கள். ராஜேஷ் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக இருக்கிறார்.
ஷர்மிளாவுக்கும் அவள் கணவருக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. தற்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். விரைவில் விவாகரத்து செய்து கொள்ளப்போகிறார்கள்.
இது பற்றி ஷர்மிளா கூறியிருப்பதாவது: நான் மீண்டும் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதே என் கணவர்தான். நான் நடித்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிற அவர் பகலில்தான் நடிக்க வேண்டும். யாருடனும் போனில் பேசக்கூடாது என்று நிறைய கண்டிஷன்கள் போட்டார். இதனால் அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் அவரை விட்டு பிரிந்து விட்டேன். விரைவில் விவாகரத்து செய்ய இருக்கிறேன்.
எனக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவனை அவரே வைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு போன் செய்தால் சுவிட்ச் ஆப் என்று வருகிறது. என் மகனை பாத்து ரொம்ப நாளாகிறது. என் மகனை அவர் கடத்தி கொண்டு சென்றிருப்பதாக கருதுகிறேன். இதுபற்றி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறேன்.
இவ்வாறு ஷர்மிளா கூறினார்.