பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
போராளிக்குப்பிறகு சமுத்திரகனி இயக்கி வரும் படம் நிமிர்ந்து நில். இந்த படத்தில் 25 வயது, 48 வயது என இரண்டுவிதமான மாறுபட்ட கெட்டப்புகளில் நடிக்கிறார் ஜெயம்ரவி. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இப்படத்தில் இரண்டு மொழிகளிலுமே அமலாபால் நாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில், கெளதம்மேனன், வெற்றிமாறன், சசிகுமார் போன்ற சில இயக்குனர்களைப்போன்று இப்போது சமுத்திரகனியும் தயாரிப்பாளராகியிருக்கிறார். அப்படி தான் தயாரிக்கும் முதல் படத்திற்கான கதையை தானே ரெடி பண்ணியுள்ள அவர், அதை இயக்கும் பொறுப்பை ஒரு அறிமுக இயக்குனருக்கு வழங்குகிறாராம்.
மேலும், திகில் கதையில் உருவாகும் அந்த படத்தில் யாரை ஹீரோவாக நடிக்க வைப்பது என்பது இன்னும் முடிவாகாத நிலையில், அப்படத்தின் நாயகியாக அமலாபாலை ஒப்பந்தம் செய்துள்ளாராம் சமுத்திரகனி. காரணம், நிமிர்ந்து நில் படத்தில் அவரே எதிர்பார்க்காத அளவுக்கு சில காட்சிகளில் இயல்பாக நடித்து அசத்தி விட்டாராம் அமலாபால். அதன்காரணமாக, தனது திகில் கதையில் அமலாபாலினால் ஸ்கோர் பண்ண முடியும் என்ற நம்பிக்கையில் முன்கூட்டியே அவரை புக் பண்ணி விட்டாராம்.
அதோடு, கதையைக்கேட்ட அமலாபாலும், இதுவரை காதல் காதல் என்று படத்துக்குப்படம் நடித்து எனக்கும் போரடித்து விட்டது. அதனால், ஒரு சேஞ்சுக்காக இந்த திகில் படத்தில் நடிப்பதில் அதிக ஆர்வமாக உள்ளேன் என்று சொன்னவர், படப்பிடிப்பு நாளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளாராம.