'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு ஆண்டுதோறும் தவறாமல் வருபவர், பல சர்வதேச விருதுகள் பெற்று புகழ்பெற்ற இயக்குநர் அடூர் கேபால கிருஷ்ணன். அவர் அளித்த பேட்டி..
கோவா திரைப்பட விழாக்களில் சினிமா ஆர்வலர்களுக்கு பல குறைகள் உண்டு. திரைப்படவிழாவில் திரையிடப்படும் படங்களை பற்றிய குறிப்புகள் அடங்கிய புத்தகம் நேரத்தில் கொடுக்கப்படுவதில்லை. அதை ஆரம்பத்திலேயே தருவதில் தொடர்ந்து தாமதங்கள், அறிவிக்கப்பட்ட படங்களில் சிலவற்றை ரத்து செய்கிறார்கள். திரையிடப்படும் இந்திய மற்றும் சர்வதேச படங்களின் தேர்வு, தேர்வு செய்யும் குழுக்களில் இடம்பெறும் நிபுணர்கள் என்று பலவற்றிலும் இன்னும் சிறப்பாக செய்ய மாட்டார்களா என்று நம்மை ஏங்க வைத்த நிலைமை பல ஆண்டுகள் இருந்தன. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக படங்களின் தேர்வு சிறப்பாக அமைந்துள்ளது.
மற்ற புகழ்பெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களைப்போல, அனுபவம் மிக்க ஒருவரை திரைப்பட விழாவிற்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்குநராக நியமித்து அவருக்கு ஆலோசனைகள் வழங்க திரைப்படத்துறையில் நிபுணர்கள் கொண்ட சிறு குழுவை ஏற்படுத்த வேண்டும். வருடத்திற்கு தேவையான மானியம் அமைப்பதோடு, தன் பங்கை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். கோவா திரைப்பட விழா சர்வதேச அளவில் மேலும் சிறப்படைய இந்த முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும்.
கோவா திரைப்பட விழாக்களில் துவக்க விழா, நிறைவு விழாக்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள் பற்றி அடூர் கோபாலகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்தார். விஷயம் அறிந்த பார்வையாளர்களுக்கு அவை ரொம்ப தர்மசங்கட்டமாக இருக்கின்றன. என்னை பொறுத்தவரையில் துவக்க விழா, நிறைவு விழாக்களிலேயே இந்த கல்சுரல் டார்ச்சருக்கு பயந்து நான் தவிக்கிறேன். துவக்க விழாவில் மும்பையிலிருந்து வரும் சினிமா நட்சத்திரங்களை அழைத்து மேடை ஏற்றுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது என்றே தெரிகிறது. சர்வதேச திரைப்பட விழா என்பது சீரியஸான விஷயம். திரைப்பட விழாவில் எந்த வகையிலும் சம்பந்தப்படாத உலக சினிமாவிலோ, இந்தியன் பனோரமாவிலோ சம்பந்தப்படாத நடிகர், நடிகைகளையும் புதுமுகங்களையும் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து அவர்களை பாராட்டுவது அர்த்தமற்றது, தேவையற்றது.
கோவாவில் திரைப்பட விழா ஆரம்பித்தபோது ஆடியன்ஸ் வருகை பற்றி சில சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் இப்போது நிறைய மாறியவிட்டன. கோவாவை சேர்ந்தவர்களை தவிர கோவாவின் வெளியே இருந்து நிறையபேர் ஒரு புனித பயணம் போல ஒவ்வொரு ஆண்டும், இங்கு வந்து பத்து நிமிடங்கள் படங்களை பார்க்கிறார்கள். 2011ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட டெலிகேட்களின் எண்ணிக்கை 3500 ஆக இருந்தது. ஆனால் இந்த வருடம்(2013) இது ஏழாயிரமாக உயர்ந்துள்ளது. இது கோவா திரைப்பட விழாவின் வெற்றிக்கு எடுத்துக்காட்டு.
உலகின் பல நாடுகளிலிருந்து புகழ்பெற்ற திரைப்பட சிற்பிகள், இங்கு நடுவர்கள் குழுவில் இடம் பெற வருகிறார்கள். உலக சினிமா பகுதியில் திரையிடப்படும் படங்களின் தரங்களை ஆராய்ந்து, சிறந்த சினிமாக்களை பரிசுகளுக்காக தேர்ந்தெடுக்கிறார்கள். சிறந்த சினிமா, டைரக்டர், நடிகர், நடிகை என்று எல்லா பிரிவுகளுக்கு அளிக்கப்படும் பரிசுத் தொகைகளும் அதிகரித்திருக்கிறார்கள். உலகம் முழுவதிலிருந்தும் நல்ல திரைப்படங்களை பார்க்க முடிகிறது. சிறந்த இயக்குநர்களின் சிறந்த படங்கள் இங்கே திரையிடப்படுகின்றன. மொத்தத்தில் நிறைவான அனுபவம் என்றார் அடூர் கோபால கிருஷ்ணன்.
அடூர் கோபால கிருஷ்ணன் முன்பு கோவா திரைப்பட விழா நடுவர் குழுவல் இடம் பெற்றிருந்தார் என்பதும், அவரது படங்கள் பல ஆண்டுகள் இங்கு திரையிடப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- கோவாவிலிருந்து எஸ்.ரஜத் -