ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கியுள்ள படம் சிவப்பு. முந்தைய படத்திலிருந்து மாறுபட்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் நிதின் சத்யா, ரூபா மஞ்சரி, ராஜ்கிரண், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் இசை மற்றும் டிரைலர் விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த டிரைலரில், இலங்கை தமிழர்களுக்கு அனைவரும் இணைந்து ஆதரவு கொடுப்போம். இல்லையென்றால் விட்டு விடுவோம். ஆனால் அவர்களை வைத்து அரசியல் பண்ண வேண்டாம் என்ற அதிரடி வசனங்களை அனல் பறக்க பேசியுள்ளார் ராஜ்கிரண். அதைப்பார்த்து விழாவுக்கு வந்திருந்த அனைவருமே அதிர்ச்சியடைந்தனர்.
இலங்கை தமிழர்களைப்பற்றிய காட்சிகளை வைக்கவே இன்றைய நிலையில் பலரும் பயந்து வரும் நிலையில், அதை இங்கிருப்பவர்கள் அரசியலாக்கிக் கொண்டிருப்பதால், அதை தைரியமாக தனது படத்தில் பதிவு செய்திருக்கிறார் சத்யசிவா.
இதையடுத்து இதே விழாவுக்கு வந்திருந்த நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமார் பேசுகையில், இந்த படத்தை இயக்கிய சத்யசிவாவுக்கு துணிச்சல் அதிகம். அதனால்தான் தனது கருத்தை தைரியமாக பதிவு செய்திருக்கிறார். இதற்காகவே அவரை பாராட்ட வேண்டும். இந்த டிரைலரில் ராஜ்கிரண் பேசும் வசனங்களைப்பற்றி எல்லோருமே சிந்திக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்று தனது கருத்தையும் பதிவு செய்து கொண்டார்.