'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மோகன்லால் நடிப்பில் கேரளாவில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் த்ரிஷ்யம். இந்த படம் வெளியான பிறகு விஜய்யுடன், மோகன்லால் நடித்த ஜில்லா படம் வெளியாகயிருந்ததால், த்ரிஷ்யம் பெரிய அளவில் பரபரப்பு இல்லாமலேயே வெளியானது. சத்தமில்லாமல் திரைக்கு வந்த த்ரிஷ்யம் இப்போது பெரிய அளவில் வசூலித்துக்கொண்டிருக்கிறது.
இதனால் அப்படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடிக்க முன்னணி நடிகர்களே தயாராகி விட்டனர். அதோடு, மோகன்லால படங்களுக்கு இருக்கிற வரவேற்பைப்பார்த்து இப்போது அவர் நடித்த சில படங்கள் தமிழுக்கு டப்பாகி வருகின்றனர்.
இந்த நிலையில், த்ரிஷ்யம் வெற்றி பற்றி மோகன்லால் வெளியிட்டுள்ள செய்தியில், இப்படத்தின் வெற்றிக்கு படத்தின் கதை மட்டுமல்லாது, திருட்டு விசிடிக்கள் வெளியாகவில்லை என்பதே காரணம் என்கிறார். மேலும், ஆரம்பத்திலேயே வெளிவந்த இப்படத்தின் திருட்டு விசடிக்களை பின்னர் சைபர் க்ரைம் போலீசார் தடுத்து விட்டனர். அதனால் இப்போது எங்கேயும் த்ருஷ்யம் படத்தின் திருட்டு விசிடிக்கள் கிடைக்கவில்லை என்பதால், ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்த்து வருகின்றனர். அதனால், தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆக, த்ருஷ்யம் படத்தின் வெற்றிக்கு காரணம் சைபர் க்ரைம் போலீசார்தான். அதனால் அவர்களுக்கு இந்த சமயத்தில் நன்றி சொல்லியே ஆக வேண்டும் என்கிறார் மோகன்லால்.