'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் டி.வியின் சூப்பர் சிங்கர் 4 போட்டியின் இறுதி சுற்றுக்கு சரத்சந்தோஷ், சையத் சுபான், திவாகர், பார்வதி, சோனியா ஆகிய 5 பேர் வந்தனர். இவர்களுக்கான இறுதிப் போட்டி கேம்பகோலா கிரவுண்டில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது.
இதில் திவாகர் பொதுமக்களின் 7 லட்சம் ஓட்டுக்களை பெற்று முதல் இடம் பிடித்து சூப்பர் சிங்கர் பட்டத்தை தட்டிச் சென்றார். மிக மிக எளிய குடும்பத்தில் இருந்து வந்த திவாகருக்கு மக்கள், ஓட்டுக்களை அள்ளி வழங்கி வெற்றி பெற வைத்தனர். திவாகருக்கு 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. நீதிபதிகளின் தீர்ப்புபடி முதல் இடம் பிடித்தாலும் 2 லட்சம் ஓட்டுக்கள் வாங்கியதால் இரண்டாவது இடத்துக்கு வந்தார் சையத் சுபான். அவருக்கு ஒரு கிலோ தங்கம் பரிசாக கிடைத்தது. மூன்றாவது இடம் சரத் சந்தோஷ்க்கு கிடைத்தது. அவருக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. நான்காவது இடத்தை சோனியாவும், பார்வதியும் பங்கிட்டுக் கொண்டனர். அவர்களுக்கு தலா 5 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
சூப்பர் சிங்கர் டைட்டில் வென்ற திவாகர் கூறியதாவது: ஒவ்வொரு ரசிகர்களும் என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவானக நினைத்து வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளனர். அவர்களுக்கு என் நன்றி. இப்போது எனக்கு ஒரு வீடு சொந்தமாக இருக்கிறது என்பதையே என்னால் நம்ப முடியவில்லை. என் வாழ்க்கை திரும்பி விட்டது. இந்த உயரத்தையும், தகுதியையும் கடைசி வரை காப்பாற்றுவேன். சினிமாவில் பாடுவதுதான் அடுத்த இலக்கு. அந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என்றார்.