‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பரதேசி படத்திற்கு பிறகு டைரக்டர் பாலா கரகாட்ட கலையை மையமாக வைத்து ஒரு படம் டைரக்ட் செய்யப்போகிறார். இதில் சசிகுமார் நடிக்கிறார். செழியன் கேமரா. இளையராஜா இசை. மற்ற டெக்னீஷியன்களும், டைட்டிலும் இன்னும் முடிவாவவில்லை. பரமன் படம் முடிந்ததும் சசிகுமார் பாலா படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதற்கிடையில் தனது அடுத்த படத்துக்கான பாடலையும் இளையராஜாவிடம் கொடுத்து இசை அமைத்து வாங்கிவிட்டார். இந்த பாடல்கள் தயாரான விதத்தை 90 விநாடி வீடியோ காட்சியாக பாலா வெளியிட்டுள்ளார். அதில் பிரசாத் ஸ்டூடியோவுக்குள் இளையராஜா காரில் வந்து இறங்கி பாடலுக்கு இசை அமைப்பது, பாலாவுடன் ஆலோசனை நடத்துவது, பாலா பாடல்களை திருத்தி தருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 6 நாட்களில் தயாரானது 12 பாடல்கள் என்றும், படப்பிடிப்புகள் மார்ச் மாதத்திலிருந்து தொடங்குகிறது என்றும் அந்த வீடியோ காடசிகள் தெரிவிக்கிறது.