டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தர். இவர் பாடியதை விட மைக் மோகனுக்கு பின்னணி குரல் கொடுத்து அவரை வாழ வைத்தவர். சுரேந்தர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இப்போது அவர் மகன் விராஜ், மொழிவது யாதெனில் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார். படத்தில் ஹீரோயின் இல்லை. ராஜன், ரியாஸ், தேஜ் என பல புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். எஸ்.கோபாலகிருஷ்ணன் என்பவர் டைரக்ட் செய்கிறார்.
"ஒரு நண்பன் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறான். அவனது நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து நண்பன் பட்ட கடனை அடைத்து அவன் குடும்பத்தை எப்படி கரை சேர்க்கிறார்கள் என்கிற கதை. நட்பை புதிய கோணத்தில் சொல்கிறோம்" என்கிறார் டைரக்டர் கோபாலகிருஷ்ணன்.
நடிக்க வந்தது பற்றி விராஜ் கூறியதாவது: அப்பாவுக்கு நான் அவரைப்போலவே பெரிய பாடகன் ஆகணும்னு ஆசை. ஆனால் என்னோட ஆசை நடிக்கிறதுல இருந்திச்சு. இதனால நடிப்பு, டான்ஸ், பைட் எல்லாத்தையும் முறைப்படி கத்துகிகிட்டு வந்திருக்கேன். நிச்சயம் நடிப்புல சாதிப்பேன்" என்கிறார்.
நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினர் விராஜ் அதுபற்றி கேட்டால்... "அவுங்க குடும்பத்தோட தொடர்பு விட்டுப்போய் ரொம்ப வருஷமாச்சு. இப்ப போய் அத எதுக்கு பேசணும்" என்று அடக்கமாக சொல்கிறார் விராஜ்.