ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டைரக்டர்கள் பாலா, அமீரினால் சினிமாவுக்குள் கொண்டு வரப்பட்டவர் கஞ்சா கருப்பு. அதனால் தன்னை வளர்த்து விட்டவர்களை நன்றி மறக்கக்கூடாது என்பதற்காகவே சென்னை வளசரவாக்கத்தில் தான் கட்டியுள்ள வீட்டிற்கு பாலா-அமீர் இல்லம் என்று பெயர் வைத்திருக்கிறார் கஞ்சாகருப்பு. இதைப்பார்க்கும்போது என்னை வளர்த்து விட்டவர்கள் அவர்கள் என்கிற நெனப்பு எனக்கு வர வேண்டும் என்பதற்காகவே அவர்கள் பெயரையே வீட்டிறகு வைத்துள்ளேன் என்று சொல்லும் கஞ்சாகருப்பு, அவர்கள் மட்டுமின்றி என்னை வளர்த்து விட்ட அனைவருக்கும் நான் எப்போதுமே நன்றியுள்ளவனாக இருப்பேன் என்கிறார்.
மேலும், தற்போது நான் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறேன். இதையடுத்து சிலர், கஞ்சாகருப்பு தயாரிப்பாளராகி விட்டார் அவருக்கென்ன என்கிறார்கள். இன்னும் சிலர், அவருக்கு தயாரிப்பாளர் என்கிற திமிரு என்கிறார்கள். ஆனால், அதெல்லாம் எதுவும் எனக்கில்லை. நான் எப்போதும்போல்தான் இருக்கிறேன். இன்னமும் தயாரிப்பாளர்களின் நிலையறிந்து அணுசரித்து நடந்து கொள்கிறேன். தயாரிப்பாளர் ஆகிவிட்டதால் எனக்கொன்றும் கொம்பு முளைத்து விடவில்லை என்கிறார்.
அதோடு, நான் தயாரிப்பாளர் ஆனதே அந்த டைரக்டருக்காகத்தான். நல்ல கதை வைத்திருக்கிறார். ஆனால் அதை நம்பி படமாக்க தயாரிப்பாளர் இல்லை. அவரது சூழ்நிலை தெரிந்து, ஒருத்தருக்கு கைகொடுப்போமே என்றுதான் தயாரிப்பாளரானேன். மற்றபடி தொடர்ந்து படங்கள் தயாரிக்க வேண்டும் என்று வரவில்லை. மேலும், ஒரு கலைஞனுக்கு கைகொடுக்க நினைத்ததை வைத்து என்னை யாரும் ஓரங்கட்டாதீர்கள் என்றும் கேட்டுக்கொள்ளும் கஞ்சாகருப்பு, நான் எப்போதுமே காமெடி நடிகன்தான் சினிமாவில் நடிகனாக வந்த நான், கடைசிவரை நடிகனாகவே இருப்பேன் என்கிறார்.