டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கில் புகழ்பெற்ற இசை அமைப்பாளர் கீரவாணி. இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். தமிழில் மரகதமணி என்ற பெயரில் அழகன், நீ பாதி நான் பாதி, வானமே எல்லை, ஜாதிமல்லி என கே.பாலச்சந்தரின் படங்களுக்கு இசை அமைத்தார். அத்தனை பாடல்களுமே ஹிட். அதேபோல தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலியின் அனைத்து படங்களுக்கு இவர்தான் இசை அமைத்து வருகிறார். தற்போது பிரமாண்டமாக தயாரகி வரும் பாகுபாலி படத்துக்கும் இவர்தான் இசை அமைப்பாளர். 1997ம் ஆண்டு வெளிவந்த அன்னமயா படத்திற்காக தேசிய விருது பெற்றார். 8 முறை மாநில அரசின் நந்தி விருதையும், 5 முறை பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார்.
தற்போது யாரும் எதிர்பாராத வகையில் கீரவாணி தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். "1989ம் ஆண்டு டிசம்பர் 9ந் தேதி சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் எனது இசை பணத்தை துவக்கினேன். வருகிற 2016ம் ஆண்டு டிசம்பர் 8ந் தேதியுடன் எனது இசைப்ப யணத்தை முடித்துக் கொள்கிறேன். அன்றைய தினம் ஐதராபாத்தில் என்னோடு இசைப்பயணத்தில் கலந்து கொண்ட அனைவரையும்கூட்டி விடைபெற இருக்கிறேன். இன்னும் 3 வருடங்கள் இருக்கிறது. அதுவரை இசை அமைப்பேன். ஓய்வுபெற்ற பிறகும் எனது ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பேன்" என்று கீரவாணி தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கிறார்.
கீரவாணியின் ஓய்வு அறிவிப்பு தெலுங்கு சினிமா வட்டாரத்தில், அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.