ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இளவரசி, சூரியபுத்ரி, தொடர்களில் பிசியாக நடித்து வரும் சந்தோஷி. அடுத்து பாவமன்னிப்பு தொடரில் இரண்டு வேடங்கில் நடிக்க இருக்கிறார். அன்பான அம்மா ஆணவம் பிடித்த மகள் என இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார். சினிமாவில் அறிமுமான சந்தோஷி சரியான வாய்ப்புகள் அமையாததால் சின்னத்திரைக்கு வந்து இங்கு பிசியாகிவிட்டார். இப்போது மீண்டும் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார். தெலுங்கில் செகண்ட் ஹீரோயின் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் சந்தோஷி விரைவில் தமிழ் படங்களிலும் நடிக்க இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ராதிகா மேடத்துக்கு பிறகு சின்னத்திரையில் நான்தான் இரட்டைவேடம் போடுகிறேன் என்று நினைக்கிறேன். இதனால் எனது பொறுப்பு அதிகரித்திருக்கிறது. சினிமா வேண்டாம் என்று எப்போதும் ஒதுங்கியதில்லை. ஹீரோயினாவும் நடிக்க முடியாத, அக்கா அண்ணி கேரக்டரிலும் நடிக்க முடியாத நிலையில் இருந்ததால் சினிமாவை விட்டு சிறிது விலகி இருந்தேன்.
தெலுங்கில் வயதுக்கும் தோற்றத்துக்கும் ஏற்ற கேரக்டர்கள் அமைவதால் நடிக்கிறேன். மன்னன் படத்தில் விஜயசாந்தி மேடம் நடித்த மாதிரி ஒரு கேரக்டரில் தெலுங்கு படத்தில் நடிக்கிறேன். நல்ல கேரக்டர் கிடைத்தால் தமிழிலும் நடிக்க தயாராக இருக்கிறேன். ஒரு நாள் இரண்டு நாள் கால்ஷீட்டில ஒரு காட்சி, இரண்டு காட்சியில் நடிக்க மாட்டேன். சினிமாவில் பிசியாக நடித்தாலும் சீரியலை கைவிட மாட்டேன். காரணம் எனக்கு கைகொடுத்தது சீரியல்கள்தான்" என்கிறார் சந்தோஷி.