டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமாவில் வாய்ப்பு கிடைக்காவிட்டால், நல்லதொரு வேலைக்கு போவேன் என வழக்கு எண் ஸ்ரீ தெரிவித்துள்ளார். சின்னத்திரையில் நடித்து வந்த ஸ்ரீ, பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் படம் மூலம் ஹீரோவானார். முதல்படத்திலேயே நல்ல நடிகர் என்று பெயர் பெற்ற ஸ்ரீ தொடர்ந்து மிஷ்கினின் இயக்கத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்தார். தற்போது புதியபடம் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீயிடம் நீங்கள் நடித்த இரண்டு படத்திலும் உங்களது நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது, இருந்தாலும் அடுத்தடுத்து புதிய படங்கள் எதுவும் நடிக்கவில்லையே என்று கேட்க, அதற்கு ஸ்ரீ, நான் யாரிடமும் வாய்ப்பு கேட்டு போய் நிற்க மாட்டேன். என் நடிப்பு மீது அவர்கள் நம்பிக்கை வைத்து என்னை நடிக்க கூப்பிட்டால் அவர்களுக்கு 100 சதவீதம் என் நடிப்பு திறமையை வெளிப்படுத்துவேன் என்று சொன்னவர், இன்னும் இரண்டு-மூன்று மாதங்கள் வரை சினிமாவில் வாய்ப்பு கிடைக்குதா என்று பார்ப்பேன், ஒருவேளை சினிமாவில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் வேலைக்கு சென்றுவிடுவேன். நான் விஸ்காம் முடித்து ஏற்கனவே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளேன். ஆகவே சினிமாவை நம்பி இல்லாமல் நல்ல சம்பளத்தில் வேலை அமையும் பட்சத்தில், வேலைக்கு போய்விடுவேன் என்கிறார்.