‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சினிமாவில் என்ட்ரி ஆனதில் இருந்தே ஹீரோக்களுடன் அதிக நெருக்கமாக நடிக்க மாட்டேன். கணுக்கால் கவர்ச்சியைகூட காட்ட மாட்டேன் என்று ஏகத்துக்கு கண்டிஷன் போட்டு நடித்தவர் நஸ்ரியா. அப்படிப்பட்ட அவரிடம்தான் தொப்புள் காட்ட வேண்டும் என்று டைரக்டர் சற்குணம் கேட்கப்போக, அப்படியென்றால் படத்திலிருந்தே விலகிக்கொள்கிறேன் என்று பின்வாங்கினார்.
ஆனால், பின்னர் அதுபற்றி அவரிடம் கேட்காத சற்குணம், அவருக்கு தெரியாமலேயே டூப் நடிகையை வைத்து அவரது தொப்புளை க்ளோசப் காட்சிகளாக்கினார். படத்தில் அது நஸ்ரியாவின் தொப்புள் போன்று சித்தரிக்கப்பட்டது. இதையடுத்து, கமிஷனர் அலுவலகம் வரை சென்றதால், டோட்டல் கோலிவுட்டே நஸ்ரியாவை நிராகரித்தது. அதனால் ஏற்கனவே அட்வான்ஸ் வாங்கியிருந்த படங்களில் நடித்து வந்தவர், இந்த மரியாதையோடு வெளியேறி விடுவோம் என்று பஹத்பாசிலை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டார்.
இந்த நிலையில், தற்போது பஹத்துடன் பெங்களூர் டேய்ஸ் என்ற படத்தில் நடித்து வரும் நஸ்ரியா, அடுத்து மணிரத்னம் என்றொரு படத்திலும் நடிக்க உள்ளார். காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், அதிக நெருக்கமான காட்சிகளும் உள்ளதாம். இதுபற்றி நஸ்ரியாவிடம் தெரிவித்தபோது, முதலில் தயங்கியவர், பின்னர் பஹத் தனது வருங்கால கணவர் என்பதால், அவருடன் நடிக்க செக்போஸ்ட் எதற்கு? என்று, அதை உடைத்துவிட்டு, நடிக்க சம்மதம் வழங்கி விட்டாராம்.