டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அனுஷ்கா, நயன்தாரா போன்ற நடிகைகள் ஆக்ஷன் கோதாவில் இறங்கியிருப்பதால், த்ரிஷாவுக்குள்ளும் ஆக்ஷன் கதைகளில் நடிக்க வேண்டும் என்ற ஆசை தலைவிரித்தாடுகிறதாம். இதையடுத்து, 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வந்தும், என்னை வித்தியாசமான கோணங்களில் சித்தரிக்காமல் ஒரே மாதிரியாக மரத்தை சுறறி டூயட் பாட மட்டுமே பயன்படுத்தி என் திறமையை வீணடித்து விட்டார்கள் என்றும் பீல் பண்ணுகிறார்.
மேலும், சினேகாவைகூட விஜயசாந்தி இடத்தில் வைத்து பவானி ஐபிஎஸ் என்ற படத்தை கொடுத்தவர்கள், நித்யாமேனனைகூட பழி வாங்கும் ரோலில் நடிக்க வைக்கிறார்கள். காஜல்அகர்வால், அமலாபாலுக்கெல்லாம் போலீஸ் வேடம் கொடுக்கிறார்கள். ஆனால் என்னை மட்டும் சாதாரண கதாநாயகியாக மட்டுமே நடிக்க வைக்கிறார்கள். ஏன் எனக்கும் அந்த மாதிரி அழுத்தமான கதாபாத்திரங்கள் தரக்கூடாதா? என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் த்ரிஷா, எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பாருங்கள், கட்டிப்பிடித்து நடிக்க மட்டுமின்றி, கம்பு சுத்தி நடிக்கவும், அடிதடி வேடங்களிலும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்துக்காட்டுகிறேன் என்று ஆவேசமாக பேசி சான்ஸ் கேட்கிறாராம்.
இதையடுத்து, த்ரிஷாவின் நியாயமான கோபத்தை மனதில் கொண்டு சில டைரக்டர்கள், அவருக்கு இருக்கிற எக்ஸ்பீரியன்சுக்கு அவரையும் ஆக்சன் கோதாவில் இறக்கி விடலாம் என்று சீரியசாக ஆலோசித்து வருகிறார்களாம். இந்த சேதியறிந்த த்ரிஷா, இனியும் உடம்பை பஞ்சு மிட்டாய் மாதிரி வைத்துக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்று இப்போது தனது உடம்பை வலுவாக்கும் கடின பயிற்சிகளில் இறங்கியுள்ளார்.